பிருத்வி நாத் கவுலா

இந்திய நூலகர்

பிருத்வி நாத் கவுலா (Prithvi Nath Kaula) இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஒரு நூலகர் அவார். 1924 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் ஒரு நிபுணராகவும் எழுத்தாளராகவும் இயங்கினார். அறுபது புத்தகங்களையும் தனிவரைவுகளையும் கவுலா எழுதியுள்ளார். ஆறு தொழில்முறை இதழ்களை நிறுவி அவற்றின் ஆசிரியராகவும் இருந்துள்ளார், 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அறிவார்ந்த இதழ்கள், 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட சக மதிப்பாய்வுகள், 43 நூற் பட்டியல்கள் மற்றும் 6000 குறிப்புகளை கவுலா எழுதியுள்ளார். 2004 ஆம் ஆண்டு [[பத்மசிறீ|இந்திய அரசு பிருத்வி நாத் கவுலாவிற்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[1] [2]

பிருத்வி நாத் கவுலா
Prithvi Nath Kaula
பிறப்பு(1924-03-13)13 மார்ச்சு 1924
சிறிநகர், சம்மு காசுமீர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு30 ஆகத்து 2009(2009-08-30) (அகவை 85)
இலக்னோ, இந்தியா
கல்லறைஇலக்னோ, இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கலை பேராசிரியர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பணிநூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிபுணர்
செயற்பாட்டுக்
காலம்
1947-2009
அறியப்படுவதுநூலகம் மற்றும் தகவல் அறிவியல்
பிள்ளைகள்5
விருதுகள்பத்மசிறீ (2004)
வலைத்தளம்
Endowment website

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பிருத்வி நாத் கௌலா 1924 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் சம்மு காசுமீரில் உள்ள சிறீநகரில் ஒரு காசுமீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தின் உயர்கல்வியை முடித்தார். 1947 ஆம் ஆண்டில் பிலானியில் உள்ள பிர்லா கல்வி அறக்கட்டளையில் நூலகராகப் பணியாற்றினார். பின்னர் இவர் மத்திய நூலகத்தின் நூலகராகவும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் , நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் கல்வித் தலைவராகவும் பணியாற்றினார். [1] [3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருத்வி_நாத்_கவுலா&oldid=3776012" இலிருந்து மீள்விக்கப்பட்டது