பி. என். கிருட்டிணமூர்த்தி

சர் பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்தி (Sir Purniah Narasinga Rao Krishnamurti) (1849 ஆகத்து12 - 1911) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் நிர்வாகியும் ஆவார். இவர் 1901 முதல் 1906 வரை மைசூர் இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார்.[1] இவர் மைசூரின் முதல் திவானான பூர்ணையா என்பவரின் நேரடி வம்சாவளியாக இருந்தார்.[2]

சர்
பூர்ணையா நரசிங்க ராவ் கிருட்டிணமூர்த்தி
16ஆவது இந்திய சாம்ராஜ்யத்தின் ஒழுங்கின் தோழர்
பதவியில்
1901–1906
ஆட்சியாளர்நான்காம் கிருட்டிணராச உடையார்
முன்னையவர்தி. ஆர். ஏ. தம்புச் செட்டி
பின்னவர்வி. பி. மாதவ ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1849-08-12)12 ஆகத்து 1849
மைசூர் இராச்சியம்
இறப்பு1911 (அகவை 61–62)
தொழில்வழக்கறிஞர், ஆட்சிப்பணியாளர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

கிருட்டிணமூர்த்தி 1849 ஆகத்துட் 12 அன்று மைசூர் இராச்சியத்தில் பிறந்தார்.பெங்களூரில் கல்வி பயின்றார். பின்னர், மசென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற இவர் 1870 இல் மைசூர் அரச சேவையில் உதவி கண்காணிப்பாளராக சேர்ந்தார். உடையார் வம்சம் அரியணையை மீட்டெடுத்த பிறகு, கிருட்டிணமூர்த்தி 1901 இல் திவானாக நியமிக்கப்படுவதற்கு முன்பு தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார். 1905 ஆகத்து 3 அன்று, இவர் திவானாக இருந்தபோது, பெங்களூரில் மின்சார விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன (மின்சார தெரு விளக்குகளைப் பெற்ற இந்தியாவின் முதல் நகரம்). ஏலந்தூர் ஏலந்தூர் தோட்டத்தின் ஐந்தாவது ஜாகிர்தாரும் ஆவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

விருதுகள் மற்றும் மரியாதைகள் தொகு

  • 1897 ஆம் ஆண்டில், கிருஷ்ணமூர்த்தி இந்திய சாம்ராஜ்யத்தின் ஒழுங்கின் தோழராக மாற்றப்பட்டார் .
  • 1903 ஆம் ஆண்டில், அவர் இந்தியப் பேரரசின் வீரத்திருத்தகையாக கௌரவிக்கப்பட்டார் .

குறிப்புகள் தொகு

  1. M.K Raghavendra. Bipolar Identity: Region, Nation, and the Kannada Language Film. Oxford University Press. பக். 17. https://books.google.com/books?id=3vQtDwAAQBAJ&pg=PT17. பார்த்த நாள்: 22 June 2011. 
  2. Harry Halén. Handbook of oriental collections in Finland: manuscripts, xylographs, inscriptions and Russian minority literature, Issues 31-34. Curzon Press. பக். 73. 
  • Mysore Gazetteer. பக். 3144.