பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்

பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் என்பது இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது மேற்குச் சென்னையில் பூந்தமல்லியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஆகும்.

கோயிலின் சிறப்புகள் தொகு

இறைவன் பெயர்: வைத்தீஸ்வரர் (கிழக்கு நோக்கியவர்)
இறைவி: தையல்நாயகி (தெற்கு நோக்கியவர்)
கோயிலின் இன்னொரு (சிறப்புப்) பெயர்: உத்தர வைதீஸ்வரர் கோவில்
தல மரம்: தாழி பனை மரம்
கோவில் திருக்குளம்: வினை தீர்த்த குளம் (கிழக்கு புறம் உள்ளது)

இந்தக் கோவில் சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று செவ்வாய் நவக்கிரக தலமாகும். இது சென்னை நகரில் உள்ள செவ்வாய்க்கான நவக்கிரகத் தலமுமாகும். கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோசம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார தலமுமாகும். இந்த தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன.

மூன்று சக்கரங்கள் உள்ளன தொகு

இந்தக் கோவிலின் பிரகாரங்கள் மிகவும் பெரியது. உள் பிரகாரத்தில் தக்சிணாமூர்த்தி, பிரம்மா, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. இந்தப் பிரகாரத்தில் ஆதி சங்கரரால் நிறுவப்பெற்ற மூன்று சக்கரங்கள் உள்ளன. அவையாவன: ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சுப்ரமணிய சக்கரம், ஸ்ரீ ஷண்முக சக்கரம். வடக்கு பிரகாரத்தில் வாசல் நோக்கி பானலிங்கம் உள்ளது. கோவிலின் கோபுரம் கிழக்கு புறமாக இருந்தாலும், பிரதானமும் ராஜகோபுரமுமானது வடக்கு பக்கம் உள்ளது. நுழைவாயில் உள்ள இடத்தில் நிறைய சிற்பங்கள் உள்ளன.

சூரிய பூஜை தொகு

மாசி மாதம் 21 முதல் 25 முடிய ஐந்து தினங்களில் நடைபெறும் சூரிய பூஜையின் போது, கதிரவனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகின்றன