பூந்தமல்லி

'பூவிருந்தவல்லி' என்றும் 'புஷ்பகிரிமங்கலம்' என்றும் அழைக்கப்படும் ஊர்

பூந்தமல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூவிருந்தவல்லி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஆவடி மாநகராட்சியின் ஒரு பகுதியும் ஆகும்.[4] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு.

பூவிருந்தவல்லி

பூந்தமல்லி

—  புறநகர்ப் பகுதி  —
பூவிருந்தவல்லி
இருப்பிடம்: பூவிருந்தவல்லி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°02′50″N 80°05′40″E / 13.047300°N 80.094500°E / 13.047300; 80.094500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பூந்தமல்லி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி பூந்தமல்லி
சட்டமன்ற உறுப்பினர்

அ. கிருட்டிணசாமி (திமுக)

மக்கள் தொகை 6,59,922 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 அடி)

குறியீடுகள்

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல் தொகு

17 சூன் 2019 அன்று பூந்தமல்லி நகராட்சியை, ஆவடி மாநகராட்சியுடன் இணைக்க, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[7][8][9][10][11]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  4. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து பிறந்தது ஆவடி மாநகராட்சி
  5. "Poonamallee". Falling Rain Genomics, Inc. http://www.fallingrain.com/world/IN/25/Poonamallee.html. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2006. 
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2006. 
  7. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
  8. Avadi becomes corporation
  9. Avadi becomes TN’s 15th municipal corporation
  10. 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
  11. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?

மேலும் பார்க்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poonamallee
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தமல்லி&oldid=3828041" இருந்து மீள்விக்கப்பட்டது