பெலிசியானோ தோசு சாண்டோசு

பெலிசியானோ தோசு சாண்டோசு (Feliciano dos Santos) தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கைச் சேர்ந்த ஓர் இசைக்கலைஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராவார். இவர் நியாசா மாகாணத்தைச் சேர்ந்தவர்.

பெலிசியானோ தோசு சாண்ட்டோசு Feliciano dos Santos
தேசியம்மொசாம்ப்பிக்கன்
பணிஇசையமைப்பாளர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் ஆர்வலர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2008)

மொசாம்பிக் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் தீவிர வறுமையில் வாழ்கின்றனர். நியாசாவின் வடக்கே உள்ள மாகாணம் நாட்டின் ஏழ்மையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அதன் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் மாகாணம் முழுவதும் சிதறிக்கிடக்கும் சிறிய கிராமங்களில் வாழ்கின்றனர். இது புதிய இங்கிலாந்து போல பெரியது. ஆனால் 170 கிலோமீட்டர் நடைபாதை மட்டுமே இங்கு உள்ளது.

மொசாம்பிக்கின் மிக தொலைதூர மூலைகளுக்கும் சுகாதாரத்தை கொண்டு வருவதற்கு பாரம்பரிய இசையை புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராம வாசிகளுக்கு இவர் உதவினார். நியாசா பிராந்தியத்தில் நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தேவையை மேம்படுத்த இசையைப் பயன்படுத்தியதற்காக 2008 ஆம் ஆண்டில் சாண்டோசுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Africa 2008. Feliciano dos Santos. Mozambique. Sustainable Development". கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது. பார்க்கப்பட்ட நாள் 21 November 2010.