பேச்சு:ஆப்கானித்தானின் வரலாறு

1979 ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இந்நிகழ்ச்சி ஆப்கான் – சோவியத் யுத்ததிற்கு வழி சமைத்தது. 1989 ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய போதிலும் நாட்டில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய கரில்லாக் குழுக்கள் தொடர்ந்தும் சோவியத் அரசால் அமைக்கப்பட்ட மத்திய அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கியது. 1992 ல் இந்த அரசு செயல் இழந்ததுடன் தலீபான் ஆட்சியைக் கைப்பற்றும் வரை இங்கு நிலையான ஒரு ஆட்சியும் இருக்கவில்லை. தலீபானால் 1996 ல் தலைநகரம் காபூல் கைப்பற்றப்பட்டது. 1990 களில் தலீபான் நாட்டின் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இவர்கள் கடுமையான இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது மற்றும் ஆண்கள் தாடியை அழகு படுத்தாமல் அதன் பாட்டுக்கு வளர விட வேண்டும் என்பவற்றைக் குறிப்பிடலாம். 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின்னர் தலீபான் சர்வதேச தீவிரவாதத்திற்கு உதவுவதாகக் கூறி அமெரிக்கா தலைமையில் தலீபான் ஆட்சி 2001 கடைசியில் ஆப்கானிஸ்தானில் இருந்து நீக்கப்பட்டது.

Return to "ஆப்கானித்தானின் வரலாறு" page.