பேர்கோஸ் பெருங்கோவில்

பேர்கோஸ் பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Burgos) என்பது கோதிக் கட்டடக்கலையில் அமைந்த கத்தோலிக்க பெருங்கோவிலாகும். இது எசுப்பானியாவின் பேர்கோசில் அமைந்துள்ளது. இது மரியாவின் பெயரில் அமைந்துள்ளது. இப்பெருங்கோயில் இதன் மிகப்பெரிய அளவிற்காகவும் தனித்துவமான கட்டடக்கலைக்காகவும் புகழ் பெற்றது. இந்தப் பெருங்கோவிலின் கட்டுமானப்பணி 1221இல் ஆரம்பமானது. இது கட்டி முடிக்கப்பட்ட பின் ஒன்பது வருடங்களுக்கு தேவாலயமாக பயன்பட்டது. ஆனால் இதன் பணிகள் அடிக்கடி தடைப்பட்டு 1567 வரை செயற்பட்டது.இது ஆரம்பத்தில் கோதிக் கட்டடக்கலை வடிவத்த்திலேயே கட்டத்தொடங்கப்பட்டாலும் இடையே வேறு கட்டடக்கலையைச் சார்ந்த வேலைப்பாடுகளும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டது.

பெர்கோசின் புனித மரியா பெருங்கோவில்
Cathedral of Saint Mary of Burgos
Catedral de Santa María de Burgos
கோதிக்கலையில் அமைந்த பேர்கோஸ் பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பேர்கோஸ், காஸ்டிலி மற்றும் லியோன், எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்42°20′26.9″N 3°42′16.1″W / 42.340806°N 3.704472°W / 42.340806; -3.704472
சமயம்கத்தோலிக்க திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1260
நிலைபெருங்கோவில்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1885, 1984
இணையத்
தளம்
www.catedraldeburgos.es
Official name: பேர்கோஸ் பெருங்கோவில்
வகை:கலாசார
வரையறைகள்:ii, iv, vi
கொடுக்கப்பட்ட நாள்:1984 (8ஆவது உலக பாரம்பரியக் குழு)
மேற்கோள் எண்.316
State Party: எசுப்பானியா
Region:வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

இந்தப் பெருங்கோவில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அக்டோபர் 31, 1984 இல் அறிவித்தது. இதன் அமைப்பு ப்ருசெல்ஸ் பெருங்கோவிலின் அமைப்பை ஒத்தது.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்கோஸ்_பெருங்கோவில்&oldid=3429382" இலிருந்து மீள்விக்கப்பட்டது