பொன்னித் திருநாள்
பொன்னித் திருநாள் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பொன்னித் திருநாள் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. கே. வேலன் |
தயாரிப்பு | ஏ. கே. வேலன் அருணாச்சலம் பிக்சர்ஸ் |
கதை | கதை ஏ. கே. வேலன் எம். ராஜரத்தினம் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | முத்துகிருஷ்ணன் பக்கிரிசாமி வெங்கடாச்சலம் கே. ஆர். ரத்தினம் வி. கே. ராமசாமி ராஜசுலோச்சனா எல். விஜயலட்சுமி சி. கே. சரஸ்வதி மனோரமா லட்சுமிராஜம் |
வெளியீடு | செப்டம்பர் 9, 1960[1] |
ஓட்டம் | . |
நீளம் | 15408 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுஅமராவதி அம்பிகாபதியைக் காதலித்தாள். அறிவு அவளைக் கவர்ந்தது. அந்தஸ்து அவர்களின் காதலுக்குக் குறுக்கே நிற்க முடியவில்லை. பொம்மி வீரனைக் காதலித்தாள். வீரம் அவளைக் கவர்ந்தது. ஜாதி அவர்கள் காதலை வெட்டிப் பிரிக்க முடியவில்லை.
விமலா பொன்னனைக் காதலித்தாள். பொன்னனின் நேர்மைக் குணமும், நெஞ்சுத் துணிவும் அவளைக் கவர்ந்தன. பண்பும் பரிவும் அவளது அன்பை அவனுக்குத் தேடிக் கொடுத்தன. தன் நெஞ்சத்து எண்ணத்தை அவனுக்கு அறிவித்தாள். மாளிகையிலே வளர்ந்தவள் மண் குடிசையிலே வாழ முடியாது-என்றான். ஆனாலும் அவள் உறுதி குலையவில்லை.
ஏழை, அந்தஸ்து அற்றவன், குடிசையில் வாழ்வோன் என்றெல்லாம் அவள் தந்தை கூறி அவள் காதலை மறுத்தபோது நெஞ்சத்தில் குடியேறிவிட்ட அவர் ஏழையானால் என்ன, இனி அவரே என் வாழ்வு என்று துணிவோடு கூறினாள். அவள் அப்பா அவனை ஆள் வைத்து அடித்த போதும் கலங்கினாளில்லை, மாறாக உரம் பெற்றாள். உறுதி கொண்டாள். மாறுவேடமிட்டுச் சென்று மருத்துவ மனையிலே காதலனைச் சந்தித்தாள். அங்கே அவள் நெஞ்சுருக அழுதது பொன்னன் தகப்பனாரின் நெஞ்சைக் கூட கரைத்து விட்டது. ஆனாலும் காப்பாற்ற விரும்பிய தகப்பனார் அவனை பட்டாளத்திற்கு அனுப்ப முடிவு செய்து விட்டார். முத்து முத்தாய்ப் பெருக்கெடுத்த கண்ணீ ரோடு விடைகொடுத்தாள். பொன்னன் சென்றதும் விமலாவின் தந்தைசெய்த சூழ்ச்சியால் குப்பம் அழிக்கப்பட்டது. பொன்னனின் நினைவால் வாடிய விமலாவுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி காத்துக் கிடந்தது. ஆமாம், அவளுக்குத் திருமணமென்ற செய்திதான்.
பொன்னனுக்குக் கடிதம் எழுதினாள். அது சதிகாரன் ஒருவன் கையிலே சிக்கியது. திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பியோடி யவள் அவளை அறியாமலே சதிகாரன் விரித்த வலையிலே விழுந்து விட்டாள். ஆனால் உலகம் அவள் ஆற்றிலே விழுந்து இறந்து விட்டதாக நினைத்தது.
மகள் ஆற்றோடு போய் விட்டாள் என்றறிந்த நாகநாதர், மனம் மாறினார். அவர் சொத்தெல்லாம் பள்ளிக்கூடமாக, ஏழை மாணவர் இல்லமாக, மருத்துவ மனையாக மாறின. திரும்பி வந்த பொன்னன் விமலா இறந்து விட்டாள் என்று அறிந்து மூர்ச்சை யானான். விமலாவின் தோழி சரசாவின் வீட்டிலே சிகிச்சை பெற்றான். காதலியைத் தேடி வந்தவன் காதலிக்கப்பட்டான். அவன் எவ்வளவோ மறுத்தும் எல்லோரும் சேர்ந்து பொன்ன னுக்கும் சரசாவுக்கும் திருமண ஏற்பாடு செய்துவிட்டனர். சதி காரன் பிடியிலிருந்து தப்பி வந்த விமலா, பொன்னனையும் சரசாவையும் மணக்கோலத்திலே கண்டாள். வெற்றி யாருக்கு? விளைவு என்ன? என்பது மீதிக் கதை.
பாடல்கள்
தொகுதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், பி. கே. முத்துசாமி, அ. மருதகாசி, புத்தநேரி சுப்பிரமணியம் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, (ராதா) ஜெயலட்சுமி, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | பொங்கி வரும் காவிரியே | சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி |
அ. மருதகாசி | 05:19 |
2 | அத்தானைப் பாரு அடி | கே. ஜமுனாராணி | 03:55 | |
3 | இன்ப வாழ்வு மலர | 3:00 | ||
4 | பட்டுச் சிறகடித்து | பி. சுசீலா | 03:50 | |
5 | கரும்பு வில்லை எடுத்து | சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, & எல். ஆர். ஈஸ்வரி |
தஞ்சை ராமையாதாஸ் | 05:52 |
6 | நாட்டுக்கோர் தந்தையடி | (ராதா) ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமி | 04:03 | |
7 | மத்தளம் கொட்ட | சூலமங்கலம் ராஜலட்சுமி | ஆண்டாள் பாசுரம் | 01:33 |
8 | வீசு தென்றலே வீசு | பி. பி. ஸ்ரீநிவாஸ் & பி. சுசீலா | புத்தநேரி சுப்பிரமணியம் | 03:17 |
9 | கண்ணும் கண்ணும் கதை பேசி | பி. கே. முத்துசாமி | 02:50 | |
10 | ஏன் சிரித்தாய் எனைப் பார்த்து | பி. பி. ஸ்ரீநிவாஸ் | 03:20 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1960 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்". Archived from the original on 2016-11-21. Retrieved நவம்பர் 4, 2016.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 207 — 208.