ப. அரங்கராஜன் குமாரமங்கலம்

இந்திய அரசியல்வாதி

பனின்ரநாத் அரங்கராஜன் குமாரமங்கலம் (மே 12 1952 - ஆகத்து 23, 2000) அரங்கராஜன் குமாரமங்கலம், பி. ஆர். குமாரமங்கலம் என்றும் அறியப்படுபவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசிலும் பின் பாரதீய ஜனதா கட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். காங்கிரசு சார்பில் 1984-1996 வரை சேலம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அரசில் சட்டம், நீதி மற்றும் நிறுவனங்களைக் கையாளும் அமைச்சராக சூலை 1991- திசம்பர் 1993 வரை பணியாற்றினார். நரசிம்ம ராவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் ஒன்றிய அமைச்சர் பதவியை விட்டு விலகினார். பின்னர் திவாரி காங்கிரசில் இணைந்த இவர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதன் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகயில் இணைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்டு 1998-2000 வரை திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

குடும்பம் தொகு

மோகன் குமாரமங்கலம் கல்யாணி முகர்சி தம்பதிகளுக்கு மகனாக மே 1952 பிறந்த இவரின் தந்தை வழி தாத்தா ப. சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். இவரின் பெரியப்பா பி. பி. குமாரமங்கலம் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்தவர். அரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் என்பவர் ஆவார். இந்த இணையருக்கு ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் என்கிற மகன் உள்ளார்.

அரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியான கிட்டி குமாரமங்கலம் தெற்கு தில்லியில் தனியாக வசித்துவந்தார். 2021 சூலை 6 அன்று அவரது வீட்டில் பணிபுரிந்துவந்த பணியாளரால் கொல்லப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு