மங்கல்வேதா

மகாராஷ்டிராவில் உள்ள நகரம்

மங்கல்வேதா (Mangalwedha), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கல்வேதா தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வைணவ ஆச்சாரியரான ஜெயதீர்த்தர் பிறந்த ஊர் ஆகும். இந்நகரத்தில் கன்னட மொழி அதிகம் பேசப்படுகிறது. இது சோலாப்பூருக்கு தென்கிழக்கில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மங்கல்வேதா
நகரம்
மங்கல்வேதா is located in மகாராட்டிரம்
மங்கல்வேதா
மங்கல்வேதா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மங்கல்வேதாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°31′00″N 75°28′00″E / 17.51667°N 75.46667°E / 17.51667; 75.46667
நாடு India
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சோலாப்பூர்
தாலுகாமங்கல்வேதா
அரசு
 • வகைநகராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்21,824
மொழி
 • அலுவல் மொழிமராத்திய மொழி
 • உள்ளூர்கன்னடம்
வட்டார மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்413305
வாகனப் பதிவுMH-13

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 4,420 வீடுகளும் 17 வார்டுகளும் கொண்ட மங்கல்வேதா நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 21,824 ஆகும். அதில் ஆண்கள் 11,109 மற்றும் பெண்கள் 11,109 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 965 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.50% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 88.82% ஆகவுள்ளது. இந்நகரத்தில் இந்துக்கள் 84.88%, இசுலாமியர் 12.99%, பௌத்தர்கள் 1.40%, சமணர்கள் 0.52% மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல்வேதா&oldid=3504167" இலிருந்து மீள்விக்கப்பட்டது