மருதூர் அரங்கராசன்

மருதூர் அரங்கராசன் (பிறப்பு: திசம்பர் 9, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ச. அரங்கராசன் எனும் இயற்பெயருடைய இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் முதல்வர். ஆராய்ச்சி தொடர்பான 7 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதூர்_அரங்கராசன்&oldid=3614068" இலிருந்து மீள்விக்கப்பட்டது