மாயாவதி குமாரி

இந்திய அரசியல்வாதி

மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.

மாயாவதி நைனா குமாரி
Mayawati in 2016.jpg
உத்தரப் பிரதேச மாநிலத்தின் 23வது, 24வது, 30வது மற்றும் 32வது முதலமைச்சர்[1]
பதவியில்
சூன் 3, 1995 – அக்டோபர் 18, 1995
மார்ச் 21, 1997செப்டம்பர் 21, 1997
மே 3, 2002ஆகஸ்ட் 29, 2003,
மே 13, 2007- மார்ச் 7, 2012.
முன்னவர் முலாயம் சிங் யாதவ்
குடியரசுத்தலைவர் ஆட்சி
குடியரசுத்தலைவர் ஆட்சி
முலாயம் சிங் யாதவ்
பின்வந்தவர் குடியரசுத்தலைவர் ஆட்சி
கல்யாண் சிங்
முலாயம் சிங் யாதவ்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 15, 1956 (1956-01-15) (அகவை 67)
புதுதில்லி, இந்தியா
அரசியல் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி
இருப்பிடம் இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
இணையம் bspindia.org

1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.

இளமைப்பருவம்தொகு

மாயாவதி இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் சனவரி 15 அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு அஞ்சல் அலுவலக ஊழியர். தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளைப் பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. UP CM's & their terms. Retrieved on March 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாவதி_குமாரி&oldid=2562810" இருந்து மீள்விக்கப்பட்டது