முப்பது சனவரி சாலை

முப்பது சனவரி சாலை (Tees January Road ) என்பது இந்தியாவின் தில்லியிலுள்ள, லுட்யன்ஸ் தில்லி பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலையாகும். இது முன்பு அல்புகெர்கி சாலை என்று அழைக்கப்பட்டது. சாலையின் பெயர், 30 (இந்தியில் தீஸ்) சனவரி, என்பது 30 சனவரி 1948 என்பது மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூர்கிறது.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் காந்தி சமிதியில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவுத் தூண்

காந்தி தனது வாழ்க்கையின் கடைசி ஐந்து மாதங்களை (144 நாட்கள்) பிர்லா மாளிகையில் 5 தீஸ் சனவரி சாலையில் பிர்லா குடும்பத்தின் விருந்தினராக இருந்தார்.[1] பிர்லா குடியிருப்பு 1966இல் காந்தி சமிதி அமைப்பதற்காக இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. [1] [2] காந்தி சமிதியை ஒட்டி உள்ள, 6 தீஸ் சனவரி சாலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி அமைந்துள்ளது .

தில்லியின் உள்ளாட்சி அமைப்பான புது தில்லி மாநகராட்சி மன்றம், 2008இல் முப்பது சனவரி சாலைக்கு அருகிலுள்ள சுற்றுப்புறங்களை 2019இல் ₹7,63,00,000 தொகைக்கு வாங்கத் திட்டமிட்டது. இந்தத் திட்டத்தில் காந்தி சமிதியின் புதிய பாதசாரி பாதைகள், தெரு விளக்குகள், தோட்டங்கள், சாலைகளின் இருபுறமும் கோடுகள், 30 சனவரி சாலை, காந்தி சமிதி, கிளாரிட்ஜ் விடுதிக்கு முன்னால் வாகனம் நிறுத்துமிடத்தை மாற்றுவது ஆகியவை அடங்கும்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Gandhi, Tushar A (2007). 'Let's Kill Gandhi!': A Chronicle of His Last Days, the Conspiracy, Murder. Investigations and Trial. New Delhi, Delhi: Rupa & Co. பக். 970-71. https://archive.org/details/letskillgandhich0000gand. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பது_சனவரி_சாலை&oldid=3777321" இலிருந்து மீள்விக்கப்பட்டது