மேலகடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேலகடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மேலகடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரிய மாணிக்க பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கரியமாணிக்கப்பெருமாள் கோவில் தெரு, கடையநல்லூர், மேலகடையநல்லூர், தென்காசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடையநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:கரியமாணிக்கப்பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி-பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைதிருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கரியமாணிக்கப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சன்னதிகளும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், விஸ்வத்சேனர், மகாலெட்சுமி, ஆண்டாள் தாயார் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைதிருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10 வது நாள் தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)