மோடுரி சத்யநாராயண்

இந்திய அரசியல்வாதி

மோட்டூரி சத்தியநாராயணன் (Moturi Satyanarayana) (2 பிப்ரவரி 1902 – 6 மார்ச் 1995) இந்திய இயக்க வீரரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினரும், 1966 முடிய மாநிலங்களவையின் நியமன உறுப்பினரும் ஆவார்.[1]இவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்க பாடுபட்டவர். இவர் தமது பிற்கால வாழ்க்கையை தென்னிந்தியாவில் இந்தி மொழியைப் பரப்ப பாடுபட்டார்.

மோடுரி சத்யநாராயண்
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
(நியமன உறுப்பினர்)
பதவியில்
3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1966
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பிப்ரவரி 1902
தொண்டபாடு, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்புமார்ச்சு 6, 1995(1995-03-06) (அகவை 93)
துணைவர்சூரியகாந்த தேவி
வேலைசமூக ஆர்வலர், அரசியல்வாதி

பெற்ற விருதுகள் தொகு

இவரது சேவையப் பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்மசிறீ விருது மற்றும் 1962ல் பத்மபூசண் விருது வழங்கிப் பாராட்டியது.[2]

மரபுரிமைப் பேறுகள் தொகு

இந்தியக் கல்வி அமைச்சகத்தின் சார்பில் இந்திய இலக்கியத்திற்கு இவரது பெயரில் ஆண்டுதோறும் மோடுரி சத்யநாராயணன் விருது வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Nominated members since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோடுரி_சத்யநாராயண்&oldid=3770880" இலிருந்து மீள்விக்கப்பட்டது