ம. சுவாமியப்பன்

ம. சுவாமியப்பன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையில் ஆசிரியராகவும், பதிவாளராகவும் 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 83 ஆய்வுக் கட்டுரைகளும், 25 பொதுக்கட்டுரைகளும், ஒரு நூலும் எழுதியிருக்கிறார். இவர் முனைவர் மா. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து எழுதிய “வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சுவாமியப்பன்&oldid=3614131" இலிருந்து மீள்விக்கப்பட்டது