யாருகலா

இந்தியப் பழங்குடிகள்

யாருகலா அல்லது எருகலா அல்லது எருகுல (Yerukala or Erukala or Erukula) என்பவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழும் பழங்குடி சமூக குழுவினர் ஆவர்.[1] 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எருகலா பழங்குடியினரின் மக்கள் தொகை 519,337 ஆகும். எருகுலாவின் மொத்த எழுத்தறிவு விகிதம் 48.12% ஆகும். பெரும்பாலானவர்கள் தெலங்காணா மாவட்டங்களில் சிறுபான்மையினருடன் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் இராயலசீமாவில் வாழ்கின்றனர். இவர்களின் தாய் மொழி தமிழ் அடிப்படையிலான யெருக்குல ஆகும். ஆனால் பெரும்பாலானவர்கள் தெலுங்கிற்கு மாறிவிட்டனர். இவர்கள் வழக்கமான குற்றவாளிகள் எனப் பிரித்தானிய ஆதாரங்களினால் அவதூறு செய்யப்பட்டனர்.[2] இதனால் குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டனர். நாடோடி வாழ்க்கை வாழ்பவர்களாக இவர்கள் உள்ளனர்.[3]

யாருகலா
வகைப்பாடுAdivasi
மதங்கள்இந்து
மொழிகள்யெருக்குல மொழி, தெலுங்கு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா
மக்கள் தொகை519,337
உட்பிரிவுகள்5

மேற்கோள்கள் தொகு

  1. Chaudhuri, Sarit Kumar; Chaudhuri, Sucheta Sen, தொகுப்பாசிரியர்கள் (2005). Primitive tribes in contemporary India: concept, ethnography and demography. 2. Mittal Publications. பக். 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8324-026-7. 
  2. Castes and Tribes of Southern India. 
  3. "The agony of Stuartpuram". 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாருகலா&oldid=3578501" இலிருந்து மீள்விக்கப்பட்டது