ரம்பையின் காதல் (1939 திரைப்படம்)
ரம்பையின் காதல் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ரம்பையின் காதல் | |
---|---|
இயக்கம் | பி. என். ராவ் |
தயாரிப்பு | சென்ரல் ஸ்டூடியோஸ் முருகன் டாக்கீ பிலிம் கோ |
நடிப்பு | கே. சாரங்கபாணி என். எஸ். கிருஷ்ணன் காளி என். ரத்னம் கே. எல். வி. வசந்தா டி. ஏ. மதுரம் ஆர். பாலசுப்பிரமணியம் டி. எஸ். துரைராஜ் கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் |
வெளியீடு | பெப்ரவரி 24, 1939 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்தொகு
கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் நாரதராகத் தோன்றிப் பாடிய வாசுதேவ சுதா, வேணுகான விலோலா என்ற பாடல் பிரபலமானது. திரைப்படத்தின் தலைப்பில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் வாத்தியக் குழுவினர் பெயர் இடம் பெற்றது. அதில், பிற்காலத்தில் இசையமைப்பாளராக விளங்கிய எஸ். எம். சுப்பையா நாயுடு ஆர்மோனியம் வாசிப்பவராக காட்டப்பட்டது.
உசாத்துணைதொகு
- "Rambayin Kaathal 1939". தி இந்து (11 ஏப்ரல் 2008). மூல முகவரியிலிருந்து 27-08-2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 நவம்பர் 2016.
வெளி இணைப்புதொகு
- யூடியூபில் வாசு தேவ சுதா - சொக்கலிங்க பாகவதர் பாடும் பாடல்