ராஜ்பத்

இந்தியாவின் தேசிய அகலச் சாலை

கடமைப் பாதை, இதன் பழைய பெயர் இராஜ பாதை. இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் இரைசினா குன்றில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விஜய் சௌக்கு, இந்தியாவின் வாயில் வழியாக தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம் வரை அமைந்துள்ள பொதும்பர் சாலையாகும். இந்த நிழற்சாலையின் இருபுறங்களிலும் பெரிய புற்றரைகள், கால்வாய்கள், மர அடுக்குகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதன்மையான சாலைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இங்கு ஆண்டுதோறும் சனவரி 26 அன்று குடியரசுநாள் அணிவகுப்பு நடைபெறுகின்றது. இந்தச் சாலை கிழக்கு-மேற்காக அமைந்துள்ளது. இதனை வடக்கு-தெற்காக உள்ள ஜன்பத் குறுக்கிடுகின்றது.

இரைசினா குன்றிலிருந்து இராஜ்பத், தொலைவில் இந்தியாவின் வாயில்.
இராஜ்பத்தில் இராசபுதன ரெஜிமென்ட்டைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு

இரைசினா குன்றின் மீது இராஜ்பத்தின் இருபுறமும் தலைமைச் செயலகக் கட்டிடத்தின் வடக்கு, தெற்கு வளாகங்கள் அமைந்துள்ளன. இச்சாலையின் ஒரு முனையில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ளது. விஜய் சௌக்கில் சன்சத் மார்கு குறுக்கிடுகின்றது; இந்தியா கேட்டிலிருந்து வரும்போது வலதுபுறத்தில் இந்திய நாடாளுமன்ற இல்லத்தைக் காணலாம். காந்தி திரைப்படத்தின் துவக்கக் காட்சி இராஜ்பத்திலிருந்து துவங்குகின்றது.

பெயர் மாற்றம் தொகு

8 செப்டம்பர் 2022 அன்று இராஜ்பத் சாலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 28 அடி உயர சிலையை திறந்து வைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இச்சாலைக்கு கடமைப் பாதை (கர்தவ்ய பாதை) எனப்பெயர் மாற்றி வைத்தார். [1][2][3][4]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்பத்&oldid=3777323" இலிருந்து மீள்விக்கப்பட்டது