ரிஷி பஞ்சமி
ரிஷி பஞ்சமி என்பது சந்திர நாட்காட்டியின் பத்ரபத் மாதத்தின் ஐந்தாவது நாள், மற்றும் விநாயக சதுர்த்தி நாளுக்கு அடுத்த நாள் ஆகும். இது சப்த ரிஷியின் பாரம்பரிய வழிபாடு என்று கருதப்படுகிறது. காஷ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதம மகரிஷி, ஜமதக்னி மற்றும் வசிஷ்டர் என்போரே அந்த ஏழு முனிவர்கள் ஆவார்கள் -கேரளாவின் சில பகுதிகளில் இந்த நாள் விஸ்வகர்மா பூஜையாகவும் அனுசரிக்கப்படுகிறது. [1] [2]
ரிஷி பஞ்சமி | |
---|---|
ரிஷி பஞ்சமி | |
கடைப்பிடிப்போர் | இந்து |
வகை | சமயம், இந்தியா மற்றும் நேபாளம் |
அனுசரிப்புகள் | பாரம்பரிய வழிபாடு |
நாள் | சந்திர நாட்காட்டியின் பத்ரபத் மாதத்தின் ஐந்தாவது நாள் |
இந்த விரதத்தில், சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பண்டைய ரிஷிகளின் மகத்தான செயல்களுக்கு மக்கள் மரியாதை, நன்றி மற்றும் நினைவை வெளிப்படுத்துகிறார்கள்.அதன்படி பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
சில ததீச் பிராமணர்கள் மற்றும் ராஜஸ்தானின் அகர்வால் மற்றும் மகேஸ்வரி மற்றும் காயஸ்தா போன்ற சமூக குழுக்களால் இந்த ரிஷி பஞ்சமி, ரக்ஷா பந்தன் அல்லது "'ராக்கி பண்டிகை'" என்றும் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் உடன்பிறந்த ஆண்களின் நலனுக்காக வேண்டிக்கொண்டு '"ராக்கி"' அல்லது '"புனித நூல்'" அவர்களின் கைகளில் கட்டுகிறார்கள் மேலும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நலனுக்காக பிரார்த்தனை செய்து, ஒருவரையொருவர் பாதுகாப்பதாக சபதம் செய்கிறார்கள்.
சடங்குகள்
தொகுரிஷி பஞ்சமி அன்று, புனித நதிகள், குளங்கள் அல்லது பிற நீர்நிலைகளில் தலைமுழுகி குளிப்பது ஒரு முக்கிய சடங்கு ஆகும். விநாயகப் பெருமான், நவகிரகங்கள் (ஒன்பது கிரகக் கடவுள்கள்), சப்தர்ஷிகள் (ஏழு முனிவர்கள்) மற்றும் அருந்ததி ஆகியோரை நினைவு கூர்ந்து இந்நாளில் வழிபாடு செய்கின்றனர். பெண்கள் கடவுளுக்கு ' பிரசாதம் ' வழங்குகிறார்கள் மற்றும் தங்கள் கணவர்களின் பாதங்களைக் கழுவுகிறார்கள். [3]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rishi Panchami". Archived from the original on 2018-04-22. Retrieved 2023-02-20.
- ↑ "Rishi Panchami". Archived from the original on 2020-02-05. Retrieved 2023-02-20.
- ↑ "Rishi Panchami". Archived from the original on 2015-10-04. Retrieved 2023-02-20.