ரோசாப்பூ ரவிக்கைக்காரி
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், தீபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது சிவகுமாரின் நூறாவது படம் ஆகும். இது பிரசங்காட கென்டித்திம்மா என்ற கன்னடத் திரைப்படத்தின் மறுவாக்கம்[1] ஆகும்.[2]
ரோசாப்பூ ரவிக்கைக்காரி | |
---|---|
![]() | |
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் |
கதை | கிருஷ்ணா |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் தீபா |
வெளியீடு | மே 18,1979 |
நீளம் | 3571 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார். பாடல்களை புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் இயற்றினர்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1979 |
இசைப் பாணி | பாடல்கள் |
நீளம் | 17:56 |
மொழி | தமிழ் |
இசைத்தட்டு நிறுவனம் | EMI Records |
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா |
வ. ௭ண் | பாடல் | பாடியவர்கள் | வரிகள் | ராகம் |
1 | "வெத்தல வெத்தல" | மலேசியா வாசுதேவன், சிவகுமார் | கங்கை அமரன் | |
2 | "மாம ஒருநாள் மல்லிகப்பூ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம்,எஸ். பி. சைலஜா | கங்கை அமரன் | |
3 | "உச்சி வகுந்தெடுத்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | புலமைப்பித்தன் | |
4 | "௭ன்னுள்ளில் ௭ங்கோ " | வாணி ஜெயராம் | கங்கை அமரன் |