லாய்நௌடாபி

லீமா லாய்நௌடாபி அல்லது லெய்நௌடாபி பண்டைய மெய்தேயின் புராணங்களிலும் மதத்திலும் உள்ள ஒரு தெய்வம். அவர் பாதாள உலக இராச்சியத்தின் கடவுள் தோங்கலேலின் இளைய மனைவி ஆவார். [1] தொங்கலேல் அவரை தனது மைத்துனரான பொய்ரிடனின் மனைவியாக அனுப்பினார். லைனாடோபி போயரிடனின் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். [2] [3] [4] முதல் களிமண் பானையை அவர் செய்தார் என்று அவருடைய புராணக்கதை கூறுகிறது. [5] இவர் ஆஷங்பாம் குல மக்களால் வழிபடப்பட்டார். [6]

லாய்நௌடாபி
லைரெம்பிகள்-இல் ஒருவர்
"லாய்நௌடாபி"
அதிபதிமாயம், அழகு, மந்திரம், தந்திரம், சூனியம் ஆகியவற்றின் கடவுள்
வேறு பெயர்கள்
  • லீமா லாய்நௌடாபி
  • லீமா லைனடாபி
  • லீமா லாய்னிடாபி
எழுத்து முறை
வகைமெய்டேய் இனம், மணிப்பூர்
துணை
  • தொங்கலேல்
  • பொய்ரெடன்
  • நொங்பான் பொம்பி லுவவ்பா
நூல்கள்
  • பொய்ரெடன் குந்தோக்
  • நொங்பான் பொம்பி லுவவ்பா
சமயம்பண்டைய மணிப்பூர்
விழாக்கள்இலாய் அரோபா

புராணம் தொகு

 
லாய்நௌடாபி

பாதாள உலகத்திலிருந்து மனித உலகத்திற்கு பயணம் தொகு

லாய்நௌடாபி டோங்கரென் மன்னரின் இளைய ராணி. பாதாள உலக இராச்சியத்தின் ராணி லைகுரெம்பி மன்னரின் முதல் மனைவி. தொங்கலேலின் இளைய சகோதரரான பொய்ரிடன், தை பாங் பானுக்கு புறப்படவிருந்தார். பொய்ரிடனின் சொந்த மனைவி இறந்துவிட்டதால், லைகுரெம்பியை அவரது மனைவியாகப் போகும்படி ராஜா கேட்டுக் கொண்டார். [7] இருப்பினும், லைகுரெம்பி செல்ல விரும்பவில்லை. மன்னரின் மனைவியாக அவரைக் கௌரவிக்க மரங்கள் ஏற்கனவே நடப்பட்டன. எனவே, லைகுரெம்பிக்குப் பதிலாக, லாய்நௌடாபி தனது மைத்துனரான பொய்ரிடனுடன் மனைவியாக அனுப்பப்பட்டார். [8]

ஒரு மனித இளவரசனுடன் காதல் தொகு

லாய்நௌடாபி (லீனாடாபி) பூமிக்கு ஒரு பயணத்தில் தனது மைத்துனரான பொய்ரிடனுடன் சென்றார். பின்னர், அவர் அவனிடமிருந்து பிரிந்தார். அவரை மன்னன் தன் மகளாக ஏற்றுக்கொண்டான். பின்னர், அவர் கௌபரோல் நமோயினு என அறியப்பட்டார். அவர் லுவாங் வம்சத்தின் இளவரசர் நோங்பன் பொம்பி லுவாபாவை காதலித்தார். இளவரசர் கௌப்ரு மலைக்குச் சென்றபோது முதன்முறையாக அவரைச் சந்தித்தார். அவரும் இளவரசர் லுவாபாவும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தினார்கள். கடவுள் தொங்கலேல் தனது சொந்த மனைவி வேறொரு ஆணுடன் நாட்களைக் கழிப்பதை விரும்பவில்லை. எனவே, அவருடைய வாழ்க்கையின் நூல் துண்டிக்கப்பட்டு, அவருடைய ஆன்மா திப்பியழைக்கப்பட்டது . ஆனாலும் இளவரசன் மனம் தளரவில்லை. தன் மனைவியின் ஆன்மாவைத் திருப்பித் தருமாறும் அல்லது அவனுடன் சண்டையிடும்படியும் தொங்கலேலுக்கு சவால் விடுத்தான். இறுதிச் சடங்கு செய்யாமல் கவுப்ரு நமோயினுவின் உடலைப் பாதுகாத்தான். தொங்கலேல் முதலில் தனது இரண்டு இளைய சகோதரர்களை ஒவ்வொருவராக சண்டைக்கு அனுப்பினார். இளவரசன் நோங்பன் பொம்பி லுவாபா தனது இரண்டு தெய்வீக எதிரிகளை தோற்கடித்தான். இறுதியாக, தொங்கலேல் அவன் முன் தோன்றினார். ஆனால் இந்த நேரத்தில், இளவரசன் சக்தி வாய்ந்த கடவுளுக்கு இணை இல்லை என்பதை உணர்ந்தான். எனவே, லுவாங் வம்சத்திற்கு மேலும் தலைமுறை உருவாக வேண்டும் என்பதற்காக, கவுப்ரு நமோயினுவின் வாழ்க்கையை மீட்டெடுக்க கருணைய செய்யுமாறு வேண்டினான். தொங்கலேல் அவன் மீது இரக்கம் கொண்டார். எனவே, அவர் தம்பதியருக்கு இன்னும் நூறு ஆண்டுகள் தாம்பத்ய இன்பத்துடன் வாழ அனுமதித்தார். புராணக்கதைகளின்படி, ஹொங்னெம் லுவாங் புன்ஷிபா கோப்ரு நமோயினு (லைனாடோபி) மற்றும் நோங்பன் பொம்பி லுவாபா ஆகியோரின் மகன் ஆவார்.

 
லாய்நௌடாபி

கோவில் மற்றும் வழிபாடு தொகு

லாய்நௌடாபி (லீனாடோபி) தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் பண்டைய காங்லீபாக்கில் ( பழங்கால மணிப்பூர் ) மெய்டேய் இனத்தைச் சேர்ந்த அஷாங்பாம் குலத்தால் பராமரிக்கப்பட்டது. இது லொயும்பா ஷின்யெனில் (கி.பி. 1100) பதிவு செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாய்நௌடாபி&oldid=3919319" இலிருந்து மீள்விக்கப்பட்டது