வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/28

விஸ்டன் கோப்பை (Wisden Trophy) என்பது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடக்கும் மட்டைப்பந்துப் போட்டியில் வழங்கப்படும் ஒரு கோப்பை ஆகும். இது விசுடன் நாட்குறிப்பின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1963ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்டது. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்திற்கு ஏற்ப தொடர்கள் விளையாடப்படுகின்றன. ஒரு தொடர் வெற்றி-தோல்வியின்றி முடிந்தால், விஸ்டன் கோப்பையை வைத்திருக்கும் அணி அதைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இந்தக் கோப்பை வெற்றியின் அடையாளமாக வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும். பிறகு அது மீண்டும் இலார்ட்சு மைதானத்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்படும். தற்போது இந்தக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வசம் உள்ளது.