விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 5, 2010

{{{texttitle}}}

குளிர்கால அரண்மனை இரசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் 1755 - 1762 காலப்பகுதியில் இரசிய மன்னர்கள் குளிர்காலங்களில் தங்குவதற்காகக் கட்டப்பட்டது. 1837, டிசம்பர் 1 இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. பின்னர் முதலாம் நிக்கலாசு மன்னனால் மீள அமைக்கப்பட்டது. 1917 இல் இடம்பெற்ற பெப்ரவரிப் புரட்சியை அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அக்டோபர் புரட்சியின் போது கம்யூனிஸ்ட்களால் கைப்பற்றப்பட்டு, எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது. ..


தொகுப்பு · சிறப்புப் படங்கள்