விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 15, 2009

{{{texttitle}}}

இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் (வெள்ளை வான் குழு) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். 1996 ஐநா அறிக்கை ஒன்றின் படி 1980-96 காலப்பகுதியில் இலங்கையில் 11,513 பேர் காணமல் போய் உள்ளனர். 1999 ஆசிய மனிதவுரிமை ஆணையத்தின் அறிக்கையின் படி, அப்போது 16,742 எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத வழக்குகள் இருந்தன. அதன் பிறகு நடத்தப்பட்ட ஆள்கடத்தல்களும் காணாமல் போதல்களும் இந்த எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கும். இவ்வாறு கடத்தப்படுவர்களில் பெரும்பான்மையானோர் ஈழத் தமிழர்கள் ஆவர். படத்தில் வெள்ளை வான் குழுவிற்கு தங்களின் மகளை பறிகொடுத்த தாயும் உறவினரும்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்