விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 2, 2012

எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு

கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானியப் பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. எசுப்பானிய அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை எசுப்பானியக் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது. படத்திலுள்ள ஓவியம் பிலிப்-ஜாக் டி லூதர்பர்க் எனும் ஓவியரால் தீட்டப்பட்டது. எசுப்பானியக் கடற்படையின் தோல்வியினைக் காட்டுகிறது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்