விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 30, 2016

கலீலியோ கலிலி ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மெய்யியலாளர் ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை" என்று பலவாறாக பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல், ஆராய்தல் ஆகியவை வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகளாகும். மேலும்...


காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். புராணங்களின் படி கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவன் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்" என்று வழங்கப்பெறுகிறார். ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார். மேலும்..