விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 5, 2008
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Sa-pepper.jpg/150px-Sa-pepper.jpg)
மிளகு (Piper nigrum) என்பது பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினை சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு தாளிப்புப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை கூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அதன் பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என பலவகைகள் உண்டு. மிளகு கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். இங்கேயே பெருமளவு இத்தாவரம் பயிரிடப்படுகிறது. மிளகு கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதனால், இப்பகுதியின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/Kalundborg-longwave.swn.jpg/150px-Kalundborg-longwave.swn.jpg)
அலைக்கம்பம் மின் கம்பத்தில் பயணிக்கும் மின்காந்த அலையை வெறுவெளியில் இடுவதற்கும், வெறுவெளியில் உள்ள மின்காந்த அலையை உள்வாங்கி மின் கம்பத்தின் ஊடாக சாதனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படும் ஒரு மின் கருவி. அதாவது மின்கம்பத்தின் துணையுடன் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் வெறுவெளியில் பயணிக்கும் மின்காந்த அலைக்கும் இடையே நிகழும் உருமாற்றத்துக்கு அலைக்கம்பம் உதவுகின்றது. அலைக்கம்பம் தொலைதொடர்பு சாதனங்கள் (சமிக்கை செலுத்திகள், சமிக்கை பெறுவிகள்), ராடர், வழிகாட்டிகள், வானலை வானியல் சாதனங்கள் போன்ற பல உபகரணங்களில் பயன்படுகின்றது.
உங்களுக்குத் தெரியுமா
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Wat_Phra_Luang_Ta_Bua.jpg/150px-Wat_Phra_Luang_Ta_Bua.jpg)
- தாய்லாந்து நாட்டில் உள்ள புலிக்கோவிலில் புலிகள் புத்த பிக்குகளுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
- 0.999... என்பதன் மதிப்பு மிகத்துல்லியமாக 1.
- மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு
- பெட்ட குறும்பர் இன மக்களிடையே மொத்தம் பதினாறு பெயர்கள் மட்டுமே உண்டு.
- மலமலசர் மொழியில் தாடி என்பதற்கு தனிச்சொல்லே கிடையாது. தாடியைக் கீழ் மீசை என்றே அழைப்பர்.
- கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
- ஒட்டகம் உண்பதற்கு புல் போன்ற உணவுகள் கிடைப்பின் 10 மாதங்கள் வரை நீர் அருந்தாமல் வாழக்கூடியது.