விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 21, 2009
டி.என்.ஏ. கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி (DNA gel electrophoresis) டி.என்.ஏ. கூழ் மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தபடும் ஒரு நுட்ப முறை ஆகும். இம்முறையின் துணையால் டி.என்.ஏக்களைக் கண்களால் பார்க்கலாம். மேலும் டி.என்.ஏ.க்கள் தரமானதா, தூய்மையானதா எனவும் அறிந்து கொள்ளலாம். தூய்மை எனில் இவ்விடத்தில் ஆர்.என்.ஏ பற்றி குறிக்கப்படும். ஆர்.என்.ஏ இல்லாத டி.என்.ஏக்கள் தூய்மையானதாகக் கருதப்படும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Swami_Vipulananda.jpg/120px-Swami_Vipulananda.jpg)
சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 - ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல். இது பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆய்வு ரீதியாக விபரிக்கும் முதல் நூலாகும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். சேக்சுபியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், மதங்க சூளாமணி என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.