வேலணையூர் சுரேஷ்

வேலணையூர் சுரேஷ் (இராமச்சந்திரன் சுரேஷ்) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தன் கவிதைகளால் பங்காற்றியவர். போராளிக் கலைஞர்களால் இளங்கவிஞர் என வர்ணிக்கப்பட்டவர்.

வேலணையூர் சுரேஷ்
பிறப்புஇராமச்சந்திரன் சுரேஷ்
13 ஏப்ரல் 1972
பெருங்குளம், வேலணை கிழக்கு, வேலணை, யாழ்ப்பாணம், இலங்கை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவரது தாயார் வேலணை கிழக்கு பெருங்குளத்தைச் சேர்ந்தவர், தந்தையார் மண்கும்பானைச் சேர்ந்தவர். இவ்விருவருக்கும் புதல்வராகிய இவர், வேலணை கிழக்கு பெருங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் பட்டம் பெற்றவர்.[1]

இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில

தொகு
  • விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக்குழந்தைகளே[2]
  • முல்லைமண் எங்களின் வசமாச்சு
  • நெஞ்சம் எண்ணி உருகுதே[3]
  • வாசலில் வீசிடும் பூங்காற்று[4]
  • ஒருகாலை புகுந்தனனே
  • மூசுமலை பேசவில்லையோ
  • கடலில் எழுதிடும் சரிதங்கள்
  • முன்பொரு காலம் ஊரிருந்தோமே
  • மெல்ல வந்து மேனிதொடும் இந்த மண்ணின் குரல் காதில் விழும்[5]
  • யாரென்று நினைத்தாய் எம்மை
  • கைகளில் விழுந்தது கிளிநொச்சி[6]
  • வெற்றிக்கொடி கையில் எடு[7]
  • கொடிகட்டிப் பறக்குது கடற்புலி[8]
  • ஏனோ இடி விழுந்தது எந்தன் தலையிலே[8]
  • ஈழத்தின் உழைப்பாளி வாழ்க
  • வீரம் விளைபூமி நம்ம மட்டக்களப்பு[8]
  • காற்றுக்கும் கைகுலுக்கும்[8]
  • வைத்த குறி தவறாது[8]

இவற்றுள் சில.

இவரது பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுகள் சில

தொகு
  • வானம் தொடும் தூரம்[9]
  • கடற்கரும்புலிகள் பாகம் 07[10]
  • அலை பாடும் பரணி (2004)
  • எமையாளும் மகாமாரி (2012)
  • கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தன் புகழ்மாலை
  • இலந்தைக்காடு சிவன் இசையமுதம்
  • நவிண்டில் - கியாந்தோட்டம் சுந்தர ஐயப்பன் இசைமாலை
  • நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் தெய்வீக கானங்கள் - 2
  • கற்பகவிநாயகர் அருளமுதம் (இலண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் மீது பாடப்பெற்ற பாடல் இறுவெட்டு)
  • கருணை மழையே கனகதுர்க்கா (இலண்டன் ஈலிங் அம்மன் மீது பாடப்பெற்ற பாடல் இறுவெட்டு)

இவற்றுள் சில.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • களத்தீ[11] (கவிதைத் தொகுப்பு, நவம்பர், 1992, விடுதலைப்புலிகள் அரசியல்துறை வெளியீடு)
  • உலராத மண் (கவிதைத் தொகுப்பு, 1995)
  • கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும் (கவிதைத் தொகுப்பு, 2015)[12]
  • பிள்ளைத் தமிழின்பம் (குழந்தைப் பாடல்கள், 2015)
  • பாட்டாலே பரவசம் (பக்திப் பாடல்களை உள்ளடக்கிய பாடலாக்கத் தொகுப்பு, 2017)

மேற்கோள்கள்

தொகு
  1. "வேலணைத் தீவு புலவர்கள் வரலாறு (1995) பக். 32". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81. 
  2. 'உலராதமண்' (1995) கவிதை நூல் பக். 69.
  3. "தேசத்தின் புயல்கள் பாகம்-02 - Discogs". https://www.discogs.com/release/8277925-Various-தசததன-பயலகள-பகம-02?srsltid=AfmBOoqrxrGJh9jQjXVLWw82X4_WOHbHNe7W6yG3o-GNh7FKeTjkPc-l. 
  4. 1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழ்.
  5. 1996ம் ஆண்டு வெளிவந்த புலிகளின் குரல் வாழ்த்துப் பாடல். சிறீகுகனின் இசையில் வெளிவந்த இப்பாடலை எஸ்.ஜி. சாந்தனும், சீலனும் (திருமாறன்) மற்றும் பிறின்சி சேர்ந்து பாடியவர்கள்.
  6. புலிகளின் குரல் வெளியீடு. சிறீகுகனின் இசையில் எஸ்.ஜி. சாந்தனும், ஜெயா சுகுமாரும் சேர்ந்து பாடியவர்கள்.
  7. நிதர்சனம் ஒளிவீச்சு - கதிர் 102.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-27. Retrieved 2015-03-04.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-27. Retrieved 2015-03-04.
  11. ஆளுமை:சுரேஷ், இராமச்சந்திரன்
  12. கவிஞர் வேலணையூர் சுரேஷின் இருநூல்கள் வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலணையூர்_சுரேஷ்&oldid=4217214" இலிருந்து மீள்விக்கப்பட்டது