வேலணையூர் சுரேஷ்
வேலணையூர் சுரேஷ் (இராமச்சந்திரன் சுரேஷ்) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தன் கவிதைகளால் பங்காற்றியவர். போராளிக் கலைஞர்களால் இளங்கவிஞர் என வர்ணிக்கப்பட்டவர்.
வேலணையூர் சுரேஷ் | |
---|---|
![]() | |
பிறப்பு | இராமச்சந்திரன் சுரேஷ் 13 ஏப்ரல் 1972 பெருங்குளம், வேலணை கிழக்கு, வேலணை, யாழ்ப்பாணம், இலங்கை |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவரது தாயார் வேலணை கிழக்கு பெருங்குளத்தைச் சேர்ந்தவர், தந்தையார் மண்கும்பானைச் சேர்ந்தவர். இவ்விருவருக்கும் புதல்வராகிய இவர், வேலணை கிழக்கு பெருங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் பட்டம் பெற்றவர்.[1]
இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில
தொகு- விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக்குழந்தைகளே[2]
- முல்லைமண் எங்களின் வசமாச்சு
- நெஞ்சம் எண்ணி உருகுதே[3]
- வாசலில் வீசிடும் பூங்காற்று[4]
- ஒருகாலை புகுந்தனனே
- மூசுமலை பேசவில்லையோ
- கடலில் எழுதிடும் சரிதங்கள்
- முன்பொரு காலம் ஊரிருந்தோமே
- மெல்ல வந்து மேனிதொடும் இந்த மண்ணின் குரல் காதில் விழும்[5]
- யாரென்று நினைத்தாய் எம்மை
- கைகளில் விழுந்தது கிளிநொச்சி[6]
- வெற்றிக்கொடி கையில் எடு[7]
- கொடிகட்டிப் பறக்குது கடற்புலி[8]
- ஏனோ இடி விழுந்தது எந்தன் தலையிலே[8]
- ஈழத்தின் உழைப்பாளி வாழ்க
- வீரம் விளைபூமி நம்ம மட்டக்களப்பு[8]
- காற்றுக்கும் கைகுலுக்கும்[8]
- வைத்த குறி தவறாது[8]
இவற்றுள் சில.
இவரது பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுகள் சில
தொகு- வானம் தொடும் தூரம்[9]
- கடற்கரும்புலிகள் பாகம் 07[10]
- அலை பாடும் பரணி (2004)
- எமையாளும் மகாமாரி (2012)
- கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தன் புகழ்மாலை
- இலந்தைக்காடு சிவன் இசையமுதம்
- நவிண்டில் - கியாந்தோட்டம் சுந்தர ஐயப்பன் இசைமாலை
- நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் தெய்வீக கானங்கள் - 2
- கற்பகவிநாயகர் அருளமுதம் (இலண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் மீது பாடப்பெற்ற பாடல் இறுவெட்டு)
- கருணை மழையே கனகதுர்க்கா (இலண்டன் ஈலிங் அம்மன் மீது பாடப்பெற்ற பாடல் இறுவெட்டு)
இவற்றுள் சில.
வெளிவந்த நூல்கள்
தொகு- களத்தீ[11] (கவிதைத் தொகுப்பு, நவம்பர், 1992, விடுதலைப்புலிகள் அரசியல்துறை வெளியீடு)
- உலராத மண் (கவிதைத் தொகுப்பு, 1995)
- கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும் (கவிதைத் தொகுப்பு, 2015)[12]
- பிள்ளைத் தமிழின்பம் (குழந்தைப் பாடல்கள், 2015)
- பாட்டாலே பரவசம் (பக்திப் பாடல்களை உள்ளடக்கிய பாடலாக்கத் தொகுப்பு, 2017)
மேற்கோள்கள்
தொகு- ↑ "வேலணைத் தீவு புலவர்கள் வரலாறு (1995) பக். 32". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.
- ↑ 'உலராதமண்' (1995) கவிதை நூல் பக். 69.
- ↑ "தேசத்தின் புயல்கள் பாகம்-02 - Discogs". https://www.discogs.com/release/8277925-Various-தசததன-பயலகள-பகம-02?srsltid=AfmBOoqrxrGJh9jQjXVLWw82X4_WOHbHNe7W6yG3o-GNh7FKeTjkPc-l.
- ↑ 1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழ்.
- ↑ 1996ம் ஆண்டு வெளிவந்த புலிகளின் குரல் வாழ்த்துப் பாடல். சிறீகுகனின் இசையில் வெளிவந்த இப்பாடலை எஸ்.ஜி. சாந்தனும், சீலனும் (திருமாறன்) மற்றும் பிறின்சி சேர்ந்து பாடியவர்கள்.
- ↑ புலிகளின் குரல் வெளியீடு. சிறீகுகனின் இசையில் எஸ்.ஜி. சாந்தனும், ஜெயா சுகுமாரும் சேர்ந்து பாடியவர்கள்.
- ↑ நிதர்சனம் ஒளிவீச்சு - கதிர் 102.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-27. Retrieved 2015-03-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-27. Retrieved 2015-03-04.
- ↑ ஆளுமை:சுரேஷ், இராமச்சந்திரன்
- ↑ கவிஞர் வேலணையூர் சுரேஷின் இருநூல்கள் வெளியீடு