அகத்தியமலை
அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இம்மலை நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதி. இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது.[1][2][3]
அகத்தியமலை | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,868 m (6,129 அடி) |
இடவியல் புடைப்பு | 1,497 m (4,911 அடி) |
படங்கள் தொகு
-
அகத்தியமலை பரந்த தோற்றம்
-
அகத்தியர் கோவில்
மேற்கோள்கள் தொகு
- ↑ Google Maps
- ↑ [Richard S Weiss 2009, p. 50–51, 81–82] and [Klaus Klostermaier (2003), A Concise Encyclopedia of Hinduism, Oxford: Oneworld Publications, ISBN 1-85168-175-2, page 17]
- ↑ "UNESCO added Agasthya Mala to its World Network of Biosphere Reserves in 2016". The Economic Times. PTI. 21 March 2016. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/indias-agasthyamala-listed-among-20-world-biosphere-reserves/articleshow/51491925.cms.