அஜந்தா

அஜந்தா (Ajanta) அல்லது அஜாந்தா என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள

அஜந்தா (Ajanta) அல்லது அஜாந்தா என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது ஜள்காவ் மற்றும் சத்திரபதி சம்பாஜிநகர் இடையிலான சாலையில் அஜந்தா குகைகளுக்கு அருகில் உள்ளது.

அஜந்தா
கிராமம்
அஜந்தா is located in மகாராட்டிரம்
அஜந்தா
அஜந்தா
இந்தியாவில் அமைவிடம்
அஜந்தா is located in இந்தியா
அஜந்தா
அஜந்தா
அஜந்தா (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°32′00″N 75°45′00″E / 20.5333°N 75.7500°E / 20.5333; 75.7500
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம்
ஏற்றம்
586 m (1,923 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
இணையதளம்maharashtra.gov.in

புவியியல்

தொகு

அஜந்தா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 586 மீட்டர் (1,923 ) உயரத்தில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

தொகு

அஜந்தா குகைகள் 1819ஆம் ஆண்டில் ஜான் சுமித் என்பவரால் இப்பகுதியில் வேட்டையாடும் போது கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்தக் கிராமம் மிகவும் பழமையானது. இது நிஜாம் ஷாஹி, முகலாயர்கள், ராஜ்புத் மற்றும் மராட்டிய உட்படப் பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்டுள்ளது. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாகாடகப் பேரரசின் கீழ் இந்தக் கிராமம் உருவானது என்றும், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு புத்த வம்சமாகும் என்றும் நம்பப்படுகிறது.

1632இல் தௌலாதாபாத் கோட்டை முற்றுகையின் போது ஷாஜகான் வெற்றி பெற்ற பிறகு, முகலாயர்களுக்கு அஜந்தா ஒரு முக்கிய கிராமமாக மாறியது. இந்தப் படையெடுப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஜெய்சால்மரைச் சேர்ந்த மகாராவல் பீம் சிங்கின் மகனான ராஜ்புத் சர்தார் நாது சிங்கிற்கு அஜந்தா கிராமம், வேதல்வாடி மற்றும் ஜஞ்சலா கோட்டையை ஷாஜகான் போரில் அவரது துணிச்சலுக்காக வழங்கினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ajanta, India Page". Falling Rain Genomics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜந்தா&oldid=4232270" இலிருந்து மீள்விக்கப்பட்டது