அமங்கல் (Amangal) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். மேலும் இது கல்குருத்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளது. இது கந்துகூர் வருவாய் பிரிவின் அமங்கல் மண்டலத்தில் அமைந்துள்ளது. [1]

அமங்கல்
நகராட்சி
அமங்கல் is located in தெலங்காணா
அமங்கல்
அமங்கல்
அமங்கல் is located in இந்தியா
அமங்கல்
அமங்கல்
ஆள்கூறுகள்: 16°51′00″N 78°31′59″E / 16.850°N 78.533°E / 16.850; 78.533
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி
மக்கள்தொகை
 • மொத்தம்18,000
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்509321
தொலைபேசி இணைப்பு எண்08543
வாகனப் பதிவுடிஎஸ்-07
அண்மை நகரம்ஐதராபாத்து
மக்களவைத் தொகுதிநாகர்கர்னூல்
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகல்குருத்தி
தட்பவெப்ப நிலைவெப்பம் (கோப்பென்)

நிலவியல் தொகு

அமங்கல் 16.850 ° வடக்கிலும் 78.533 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 507 மீட்டர் (1,663 அடி) ஆகும்.

வரலாறு தொகு

இரச்செர்லா பத்மநாயக்க வம்சம் 13ஆம் நூற்றாண்டில் அமங்கலை அதன் தலைநகராக ஆட்சி செய்தது. [2] பத்மநாயக்கன் வம்சம் காக்கத்திய மன்னர்களின் நிலப்பிரபுக்களாக இருந்தனர். இரச்செர்லா நாயக்கர்கள் தங்கள் தலைநகரான அனுமகல்லுவில் (அமங்கல்) இருந்தனர். இரச்செர்லா பத்மநாயக்க வம்சத்தின் முன்னோடி முதலாம் சிங்கமநாயக்கன் என்பவனாவான். அவன் தனது இராச்சியத்தை அமங்கலில் இருந்து ஆட்சி செய்தான். அதைத் தொடர்ந்து, அவனது வாரிசுகள் இரச்சகொண்டா மற்றும் தேவரகொண்டாவுக்கு மாறினர். பொ.ச. 1360ஆம் ஆண்டில், தலைநகரத்தை அனபோத நாயக்கன் என்பவன் அனுமகல்லுவிலிருந்து இரச்சகொண்டாவுக்கு மாற்றினான். அங்கு அவன் ஒரு வலுவான கோட்டையைக் கட்டினான். நிர்வாக வசதிக்காக அனபோத நாயக்கன் இராச்சியத்தை இரண்டாகப் பிரித்தான். அவனது சகோதரன் மாதநாயக்கன் தேவரகொண்டாவிலிருந்து ஆட்சி செய்தான்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமங்கல்&oldid=3147169" இருந்து மீள்விக்கப்பட்டது