இரவீந்திரநாத் குமார்
இந்திய அரசியல்வாதி
இரவீந்திரநாத் குமார் (பிறப்பு:03 பிப்ரவரி 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகனாவார்.
ப. இரவீந்திரநாத் குமார் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 23 மே 2019 | |
முன்னவர் | ஆர். பார்த்தீபன் |
தொகுதி | தேனி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 3 பெப்ரவரி 1980 தென்கரை, பெரியகுளம், தேனி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | ![]() |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஆனந்தி ரவீந்திரநாத் |
உறவினர் | ஓ. பன்னீர்செல்வம் (தந்தை) |
பிள்ளைகள் | மூன்று |
இருப்பிடம் | பெரியகுளம், தேனி, தமிழ்நாடு |
அரசியல் வாழ்க்கைதொகு
இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரசு தலைவரான ஈ. வெ. கி. ச. இளங்கோவனை விட 76,319 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார். தற்போது தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக உள்ளார்.[1][2] 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவின் தரப்பிலிருந்து ஒரே ஆள் இவர் மட்டுமே.
மேற்கோள்கள்தொகு
- ↑ "தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி". தினத்தந்தி (மே 24, 2019)
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)