இராம் கணேஷ் கட்கரி

மராத்தி கவிஞர்

இராம் கணேஷ் கட்கரி (Ram Ganesh Gadkari) (மே 26, 1885 - சனவரி 23, 1919) இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த மராத்தி கவிஞரும், நாடக ஆசிரியரும், நகைச்சுவையாளருமாவார்.

மராத்தி இலக்கியத்தில் தற்கால மாற்றத்தில் எழுத்தாளர்களில் ஒருவரான இவர், கோவிந்தராஜ் என்ற புனைப் பெயரில் கவிதைகளையும், பலராம் என்ற புனைப் பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதினார். இவர் தனது சட்டப் பெயரில் நாடகங்களை எழுதினார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

குசராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கணதேவி நகரில் மராத்தி சந்திரசேனியா கயஸ்தா பிரபு குடும்பத்தில் 1885 மே 26 அன்று இவர் பிறந்தார். இவர் 1918 சனவரி 23 அன்று நாக்பூருக்கு அருகிலுள்ள சோனரில் இறந்தார். [1]

இவரது தந்தை கணேஷ் ரகுநாத் (வாசுதேவ்) கட்கரி 1893 செப்டம்பர் 24 அன்று இறந்தார். வறுமை இவரது முறையான கல்விக்குத் தடையாக இருந்தது. இவர் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியை 19 வயதில் முடித்து புனேவின் பெர்குசன் கல்லூரியில் சேர்ந்தார். கணிதத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், கல்லூரியில் முதல் ஆண்டின் இறுதியில் தனது கல்வியைக் கைவிட்டார். பின்னர், தனது தீவிர இலக்கிய ஆர்வங்களைத் தொடரும்போது கற்கத் தொடங்கினார்.

இவருக்கு 19 வயது வரை மராத்தி பேச வராது. பின்னர், மராத்தி, சமசுகிருதம் மற்றும் ஆங்கில இலக்கியங்களை விரிவாகப் படித்து படித்தார். இவர் குறிப்பாக சமசுகிருத நாடக ஆசிரியர்களான காளிதாசன், பவபூதி ஆகியோரின் படைப்புகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்தார். தனது சகாப்தத்தின் நவீன மராத்தி கவிஞர்கள் கேசவசுதா, சிறீபாத் கிருட்டிணா கோல்கர், ஞானேஷ்வர், மோரோபந்த் போன்ற முந்தைய கால மராத்தி கவிஞர்கள்; மற்றும் சேக்சுபியர், பெர்சி செல்லி, மார்க் டுவைன் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள்.

சொந்த வாழ்க்கை தொகு

இவர், இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி சீதாபாய் இவரை விட்டு விலகியிருந்தார், ஆனால் சில சமகாலத்தவர்களின் கூற்றுப்படி, அவரை இவர் கைவிட்டதாகத் தெரிகிறது. இவரது இரண்டாவது மனைவி ரமா இவரை விட சுமார் 17 வயது இளையவர். ஆனால் இதுவும் மிகவும் மகிழ்ச்சியான திருமணமாக இல்லை.

இலக்கியப் பணி தொகு

35 வருட குறுகிய காலத்திற்குள், கட்கரி நான்கு முழுமையான நாடகங்கள், மூன்று முடிக்கப்படாத நாடகங்கள், 150 கவிதைகள் மற்றும் சில நகைச்சுவையான கட்டுரைகளை எழுதியுள்ளார். (தான் இறந்த நாளில், பாவ பந்தன் என்ற நாடகத்தை சில மணிநேரங்களுக்கு முன்பே எழுதி முடித்தார். ) இலக்கிய விமர்சகர்கள் இவரது படைப்புகள் அனைத்தும் மிக உயர்ந்த திறமை வாய்ந்தவை என்று தீர்மானித்துள்ளனர்.

தானேவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில், தானே நகராட்சி மன்றம் 1979 ஆம் ஆண்டில் ரங்காயத்தான் என்ற ஒரு நாடக அரங்கத்தை உருவாக்கி அதற்கு இராம் கணேஷ் கட்கரி எனப் பெயரிடப்பட்டது. இந்த அரங்கம் பல்வேறு நாடகங்களையும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. புனே நகரத்திலும் நன்கு அறியப்பட்ட சம்பாஜி பூங்காவில் கட்கரியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்கரி தனது முழுமையற்ற நாடகமான 'ராஜசான்யாசி' என்ற நாடகத்தில் சம்பாஜியை மோசமாக சித்தரித்தாகக் கூறி மராத்திய தீவிரவாதக் குழுவான சம்பாஜி படைப்பிரிவின் செயற்பாட்டாளர்களால் இந்த சிலை பிடுங்கப்பட்டு முத்தா ஆற்றில் வீசப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் நிதேஷ் ரானே இதற்கு தான்தான் காரணம் என்றும், சிலையை அகற்றுவதற்காக 2016 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே ஒரு வெகுமதியை அறிவித்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கொண்ட செயலுக்கு பெருமை தெரிவிப்பதாகவும் கூறி எரிச்சலூட்டும் கருத்துக்களை தெரிவித்தார். [2] [3] [4]

மேற்கோள்கள் தொகு

  1. Ganesh Prabhakar Pradhan (1992). Ram Ganesh Gadkari. Sahitya Akademi, New Delhi. பக். 2. ""Ram Ganesh Gadkari was born in a lower middle class Kayastha Prabhu family at Navasari in Surat District of Gujrat, on 26th may, 1885"" 
  2. "Cong MLA Rane rewards vandals". 
  3. Mukherjee. "Sambhaji Brigade vandalises statue of litterateur R.G. Gadkari in Pune". The Hindu. 
  4. Smruti Koppikar. "Maratha pride (and votes): Why the statue of a legendary Marathi playwright was vandalised in Pune". 

வெளி இணைப்புகள் தொகு

http://indiatoday.intoday.in/story/pune-maratha-brigade-writer-statue-removed/1/848253.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_கணேஷ்_கட்கரி&oldid=3053629" இலிருந்து மீள்விக்கப்பட்டது