தானே
தானே (IPA: [ˈʈaɳe]) (மராத்தி : ठाणे), இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில், மும்பைப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது மும்பை பெருநகரப் பகுதியாகும். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் போரி பந்தரில் (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே ஆசியாவில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147 km2 பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்[1]மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42 தானே மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளையும், கிழக்கு விரைவு நெடுஞ்சாலையையும் இணைக்கிறது.
தானே (ठाणे, டாணே) | |
— நகரம், மாவட்டத் தலைமையிடம் — | |
அமைவிடம் | 19°10′21″N 72°57′25″E / 19.172431°N 72.957019°Eஆள்கூறுகள்: 19°10′21″N 72°57′25″E / 19.172431°N 72.957019°E |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முதலமைச்சர் | உத்தவ் தாக்கரே |
மேயர் | அசோக் வைத்தி |
நகராட்சி பொறுப்பாளர் | ஆர். இராசீவ் |
மக்களவைத் தொகுதி | தானே |
மக்கள் தொகை • அடர்த்தி |
24,86,941 (2011[update]) • 16,918/km2 (43,817/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 147 சதுர கிலோமீட்டர்கள் (57 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.thane.nic.in |
இன்று தானே அனைத்து துறைகளிலும் முதன்மை வகிக்கிறது.
திவா - மும்ரா - கல்வா பகுதிகள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும்..
இப்பகுதி மக்கள் தங்கள் பயணத்தை புறநகர் ரயில் சாந்தே உள்ளனர்.
தானேயின் பகுதிகள்தொகு
- தானே
- திவா - மும்ரா - கல்வா
- மும்ப்ரா-கௌசா
- கல்வா
- கோப்ரி
- கோல்செட்
- கோட்பந்தர் ரோடு
- சில் பட்டா
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு
- ↑ Sub_Districts_Master. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.
வெளியிணைப்புகள்தொகு
- Thaneweb.com – The city portal
- Thanecity.in – Thane community portal