இராய் வம்சம்

இராய் வம்சம் (Rai Dynasty) (கி பி 416–644) தற்கால பாகிஸ்தானின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் பலுசிஸ்தான் கந்தகார், காஷ்மீர், கராச்சி, சூரத், கட்ச் போன்ற பகுதிகளை, கி பி 416 முதல் 644 முடிய ஆண்டவர்கள். இராய் குல மன்னர்கள் இந்து மற்றும் பௌத்த சமயங்களை ஆதரித்தனர்.[1] இராய் வம்சத்தவர்கள் ஆண்ட நிலப்பரப்பின் அளவு 600,000 சதுர மைல் (1,553,993 ச கி மீ) கொண்டது.

இராய் பேரரசு
راءِ
கி பி 416–644
தலைநகரம்அல்ரோர்
சமயம்
பௌத்தம் மற்றும் இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
வரலாற்று சகாப்தம்செந்நெறிக் கால இந்தியா
• தொடக்கம்
கி பி 416
• முடிவு
644
முந்தையது
பின்னையது
[[ரோர் வம்சம்]]
அலோரின் சாச்

ராசிதீன் கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில், கி பி 644-இல் நடைபெற்ற போரில் அரபு இசுலாமியர்களிடம் இராய் வம்சத்தவர்கள் தோற்றனர்.[2][3]

இராய் வம்ச மன்னர்கள் பௌத்தம் மற்றும் இந்து சமயங்களை ஆதரித்தனர். இராய் குலத்தவர்களின் தலைநகரான அல்-ரோர் அருகில் தற்கால பாகிஸ்தானில் உள்ள சுக்கூர் எனுமிடத்தில் சிவபெருமானுக்கு ஆலயம் கட்டினர்.

இராய் வம்ச ஆட்சியாளர்கள் தொகு

  • இராய் திவா ஜி (தேவாதித்தியா)
  • இராய் சகிராஸ் (ஸ்ரீ ஹர்சா)
  • இராய் சகாசி (சிங்கசேனன்)
  • இரண்டாம் இராய் சகிராஸ்
  • இரண்டாம் சகாசி

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Rai dynasty of Sind
  2. Peter Crawford, The War of the Three Gods: Romans, Persians and the Rise of Islam, (Pen & Sword, 2013), 192.[1]
  3. André Wink, Al-hind: The Making of the Indo-islamic World, Vol. I, (E.J. Brill, 1990), 133.[2]
முன்னர்
ரோர் வம்சம்
இராய் வம்சம்
கி பி 489–690
பின்னர்
அரபு இசுலாமியப் படையெடுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராய்_வம்சம்&oldid=2644876" இலிருந்து மீள்விக்கப்பட்டது