இரெ. இளம்வழுதி

இரெ. இளம்வழுதி (Ere. Elamvazhuthi) (பிறப்பு: 5 செப்டம்பர் 1925) என்பவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார்.

இரெ. இளம்வழுதி
Ere. Elamvazhuthi
பிறப்புஇரெ. தண்டபாணி
5 செப்டம்பர் 1925
சங்கிலிகுப்பம்,
தென் ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு22 அக்டோபர் 1970(1970-10-22) (அகவை 45)
கடலூர், தமிழ்நாடு, இந்தியா
பணிஅரசியலர்
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி
அண்ணப்பூரணி
பிள்ளைகள்மேகலா
புகழேந்தி
உதயராணி
கலையரசி
மாலதி
பன்னீர்செல்வம்
உறவினர்கள்வெற்றிமாறன்
(மகள்வழிப் பேரன்)

தொடக்க வாழ்க்கை தொகு

கடலூருக்கு அருகிலுள்ள சங்கிலிகுப்பம் என்ற சிற்றூரில் இரெங்கசாமி மற்றும் செளந்தரம் தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.

கல்வி தொகு

இவர் தனது பள்ளிப்படிப்பை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் (ஒரு பள்ளி என்றாலும், அது ஒரு கல்லூரி என்று அழைக்கப்பட்டது), சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைத் பட்டத்தினையும் மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பட்டத்தினையும் பெற்றார்.

தொழில் தொகு

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார்.

அரசியல் தொகு

இளம்வழுதி 1967 முதல் 1970 வரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வெற்றிபெற்றவர்.[1] இவர் பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் கா. நா. அண்ணாதுரை ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். மேலும் திராவிடக் கொள்கையில் இவர் கொண்டிருந்த இடைவிடாத நம்பிக்கையும் ஆதரவும் காரணமாகத் தனது பெற்றோர் வைத்த தண்டபாணி என்ற பெயரினை இளம்வழுதி என மாற்றிக்கொண்டார்.

தனி வாழ்க்கை தொகு

இவர் விசாலாட்சியை மணந்தார். விசாலாட்சி ஒரு விபத்தில் மரணமடைந்ததையடுத்து அன்னபூரணியை என்பவரை மணந்தார்.

தமிழ்ப் பற்றின் காரணமாக தன் குழந்தைகளுக்கு மேகலா, புகழேந்தி, உதயராணி, கலையரசி, மாலதி மற்றும் பன்னீர் செல்வம் எனத் தூயத் தமிழ் பெயரிட்டார்.

மறைவு தொகு

இளம்வழுதி 22 அக்டோபர் 1970 அன்று மாரடைப்பால் மறைந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெ._இளம்வழுதி&oldid=3704959" இருந்து மீள்விக்கப்பட்டது