இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம்

(இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தம் (Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka) என்பது இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டமூலம் ஆகும்.[1] இத்திருத்தச் சட்டமூலத்தின் படி, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஆகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் ஆக்கப்பட்டது.[2]

வரலாறு தொகு

1987 சூலை 29 இல், அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முகமாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜெயவர்தனாவிற்கும் இடையில் கொழும்பு நகரில் கையெழுத்திடப்பட்டது.[3] இதனை அமுல் படுத்தும் வகையில் 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் 1978 அரசமைப்புச் சட்டத்திற்கு 13வது திருத்தத்தை அறிவித்து, இல. 42 மாகாண சபை சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Upasiri de Silva (ஏப்ரல் 3, 2013). "13th Amendment - President Rajapaksa can barter his Waterloo?". Sri Lanka Guardian. பார்க்கப்பட்ட நாள் 2013-05-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Sabina Martyn (சனவரி 16, 2013). "In Post-Conflict Sri Lanka, Language is Essential for Reconciliation". Asia foundation. பார்க்கப்பட்ட நாள் 2013-05-23.
  3. R. Hariharan (July 28, 2010). "Looking back at the Indo-Sri Lanka Accord". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  4. "Sri Lanka - Provincial Councils". Priu.gov.lk. 2010-09-03. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.

வெளி இணைப்புகள் தொகு