இராஜீவ் காந்தி

இந்தியாவின் ஆறாவது பிரதம மந்திரி
(ராஜீவ் காந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.[1]

இராசீவ் காந்தி
Rajiv Gandhi
1987 இல் இராசீவ் காந்தி
7-வது இந்தியப் பிரதமர்
பதவியில்
31 அக்டோபர் 1984 – 2 திசம்பர் 1989
குடியரசுத் தலைவர்செயில் சிங்
ரா. வெங்கட்ராமன்
முன்னையவர்இந்திரா காந்தி
பின்னவர்வி. பி. சிங்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
18 திசம்பர் 1989 – 23 திசம்பர் 1990
பிரதமர்வி. பி. சிங்
முன்னையவர்வெற்றிடம்
பின்னவர்லால் கிருட்டிண அத்வானி
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்
பதவியில்
1985–1991
முன்னையவர்இந்திரா காந்தி
பின்னவர்பி. வி. நரசிம்ம ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 ஆகத்து 1981 – 21 மே 1991
முன்னையவர்சஞ்சய் காந்தி
பின்னவர்சத்தீசு சர்மா
தொகுதிஅமெதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராசீவ் ரத்னா காந்தி

(1944-08-20)20 ஆகத்து 1944
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
இறப்பு21 மே 1991(1991-05-21) (அகவை 46)
திருப்பெரும்புதூர், தமிழ்நாடு, இந்தியா
காரணம் of deathபடுகொலை
நினைவகங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1981–1991)
துணைவர்சோனியா காந்தி (1968-1991)
உறவுகள்பார்க்க: நேரு-காந்தி குடும்பம்
பிள்ளைகள்
பெற்றோர்(s)பெரோசு காந்தி
இந்திரா காந்தி
முன்னாள் கல்லூரிதிரித்துவக் கல்லூரி, கேம்பிறிச்சு (முடிக்கவில்லை)
லண்டன் இம்பீரியல் கல்லூரி (முடிக்கவில்லை)
வேலை
  • விமான ஓட்டுநர்
  • அரசியல்வாதி
விருதுகள்பாரத ரத்னா (1991)
வீர பூமி, இராசீவ் காந்தி உடல் எரியூட்டப்பட்ட இடம், தில்லி

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.[3]

சமய நல்லிணக்க நாள் தொகு

இராசீவ் காந்தி பிறந்த நாளான ஆகத்து, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜீவ்_காந்தி&oldid=3816058" இலிருந்து மீள்விக்கப்பட்டது