இந்திரா காந்தி

இந்திய அரசியல்வாதி மற்றும் பிரதமர்

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இந்திரா காந்தி
Indira Gandhi
4வது இந்திய பிரதம மந்திரி
பதவியில்
14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
குடியரசுத் தலைவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
ஜெயில் சிங்
முன்னையவர்செளதரி சரன் சிங்
பின்னவர்ராஜீவ் காந்தி
பதவியில்
24 சனவரி 1966 – 24 மார்ச் 1977
குடியரசுத் தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
ஜாகீர் உசேன்
வி. வி. கிரி
பக்ருதின் அலி அகமது
Deputyமொரார்ஜி தேசாய் (1967-1969)
முன்னையவர்குல்சாரிலால் நந்தா
பின்னவர்மொரார்ஜி தேசாய்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
9 மார்ச் 1984 – 31 அக்டோபர் 1984
முன்னையவர்நரசிம்ம ராவ்
பின்னவர்ராஜீவ் காந்தி
பதவியில்
22 ஆகத்து 1967 – 14 மார்ச் 1969
முன்னையவர்எம். சி. சாக்ளா
பின்னவர்தினேஷ் சிங்
நிதியமைச்சர்
பதவியில்
26 சூன் 1970 – 29 ஏப்ரல் 1971
முன்னையவர்மொரார்ஜி தேசாய்
பின்னவர்ஒய். பி. சவாண்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-11-19)19 நவம்பர் 1917
அலகாபாத், ஐக்கிய மாநிலங்கள், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 அக்டோபர் 1984(1984-10-31) (அகவை 66)
புதுதில்லி, தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்பெரோஸ் காந்தி
பிள்ளைகள்ராஜீவ் காந்தி
சஞ்சய் காந்தி
முன்னாள் கல்லூரிவிஸ்வபாரதி பல்கலைக்கழகம்
சோமர்வில் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
கையெழுத்து

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969-இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.

1971-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.

எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.

எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984-இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இளமை தொகு

 
காந்தியுடன் சிறுமி இந்திரா
 
நேரு குடும்பம் - மத்தியில் இருப்பவர் மோதிலால் நேரு, (இடமிருந்து வலமாக) நிற்பவர்கள், ஜவஹர்லால் நேரு, விஜயலக்ஷ்மி பண்டிட், கிருஷ்ணா ஹூதீசிங்க, இந்திரா மற்றும் ரஞ்சித் பண்டிட்; அமர்ந்திருப்பவர்கள்: சுவரூப ராணி, மோதிலால் நேரு மற்றும் கமலா நேரு 1927களில்.

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார்.

நோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது.

நேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். "இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது.

ஐரோப்பாவில் கல்வி தொகு

1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார்.[1]

1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள். [2]

ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார்.[3]

பெரோஸ் காந்தியுடன் திருமணம் தொகு

இந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள்.[4] பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.[5]

பெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள்.[6] சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார்.

அரசியல் ஈடுபாடு தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் தொகு

 
இந்திரா மற்றும் மகாத்மா காந்தி ( 1930களில்)

1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் தொகு

1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.[7] இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் காரணமாக இந்திரா மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார்.

"திருமதி. இந்திராகாந்திக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் போது, பல மாநிலங்களில் இருந்த மத்திய காங்கிரஸ் [கட்சி] தலைமைகள் மற்றும் மாநில காங்கிரஸ் [கட்சி] அமைப்புகளில் இருந்த மேல் சாதித் தலைவர்களை மாற்றி பிற்பட்ட சாதியினரை அவர்களுக்கு மாற்றாக இருத்தவும், இதன் மூலம் மாநில காங்கிரஸிலும், எதிர்கட்சியிலும் இருந்த போட்டியாளர்களைத் தோற்கடிக்கவும், பிந்தைய சாதியினரின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவும் முனைந்தது. இந்த தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகள், (இவற்றில் சில வெறுமனே சமூக முன்னேற்றமாகவும் உணரப்பட்டது), பொதுவாக இன பிராந்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது...."[8]

இந்தியா-பாகிஸ்தான் போர் தொகு

1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.[9]

பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார். மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார்.

தலைமை அமைச்சர் தொகு

முதல் பதவிகாலம் தொகு

1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான பொதுவுடைமைவாதிகள் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் குங்கி குடியா என்று இந்திராவை அழைத்தார்.[10]

இந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545மக்களவை இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் துணை பிரதம மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார்.

1971ல் பாகிஸ்தானுடனான யுத்தம் தொகு

பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது.[11][12] கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சென்கருடனான இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை "சூனியக்காரி" என்றும் "தந்திர நரி" என்றும் குறிப்பிட்டிருந்தார். [13]. இந்திரா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, பங்களாதேஷ் உருவானது.

வெளிநாட்டு கொள்கை தொகு

 
1971ல் ரிச்சர்டு நிக்சனும், இந்திராகாந்தியும்

இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன.

இந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000 போர்க்கைதிகள் இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன் பாகிஸ்தான் உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.

ரூபாய் மறுமதிப்பீடு தொகு

1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது.

அணு ஆயுதங்கள் திட்டம் தொகு

சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "சிரிக்கும் புத்தர்" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது.

பசுமை புரட்சி தொகு

1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவில் கடுமையாக நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது. கோதுமை, அரிசி, பருத்தி மற்றும் பால் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது.[14]

1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார்.[15] இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது:

  1. புதிய வகை விதைகள்,
  2. இந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற
  3. புதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு
  4. உயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம்.[16]

சுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. தினை, கிராம்பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன.

1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975) தொகு

1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் அவர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள்.

உள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். "புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது."[17]. வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும் தொகு

1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்கு எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார்.[18] 1971 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார்.

ராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்களவைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் நாடாளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் மக்களவையில் (இந்திய நாடாளுமன்றத்தில் கீழ்சபை) அல்லது மாநிலங்களவையில் (நாடாளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கினால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். "திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்," என்று அவர் தெரிவித்தார். "இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

போராட்டங்களும், உள்நாட்டுக் கலகங்களும் தொகு

இந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், "அவர் தமது கடைசி மூச்சு"[19] உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று ஜெய பிரகாஷ் நாராயண் காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன.

இந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட "ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் 356வது பிரிவின்கீழ் அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த சஞ்சய் காந்தியின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு மாற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், ஜெய பிரகாஷ் நாராயண், சத்யேந்திர நாத் சின்ஹா மற்றும் ஆச்சார்ய கிருபாளனி போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர்.

நாட்டின் அவசரகால நிலை (1975–1977) தொகு

தேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்மையால் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது, நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு 352 பிரிவின் அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

சில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.[20] ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார்.

"வலுவான முதலமைச்சர்களி்ன் கட்டுப்பாட்டிலும், அவர்களின் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் மாநில கட்சி அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பிய அவர் தந்தையைப் (நேரு) போலில்லாமல், சுதந்திரமான அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒவ்வொரு காங்கிரஸ் முதலமைச்சரையும் திருமதி. காந்தி வெளியேற்றினார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவான அமைச்சர்களை அவர்களுக்கு மாற்றாக நியமித்தார்...இவ்வாறு இருந்தும், மாநிலங்களில் ஸ்திரமின்மையைத் தக்க வைக்க முடியவில்லை..."[21]

தீர்ப்பின்படி ஆட்சி தொகு

தீர்ப்பாய ஆட்சியை அனுமதிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமற்ற ஆணைகளை குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. ஜக் மோகன் கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் விதைநாளத்தில் கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன.

தேர்தல்கள் தொகு

அவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர் ஜனதா கட்சியால் எதிர்க்கப்பட்டார். "ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும்.

நீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம் தொகு

 
1984 சோவியத் ஒன்றியத்தின் நினைவு அஞ்சல்தலை

1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகவும், நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 இடைதேர்தலில் வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. ஜகஜீவன் ராம், பஹூகுணா மற்றும் நந்தினி சத்பதி போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி நாடாளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது.

பல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி சௌத்ரி சரண் சிங், பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது.

இந்திரா (அல்லது "அந்த பெண்மணி", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த "தவறுகளுக்காக" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொடங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் சரண் சிங் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது.

1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கும், இலங்கையில் இருந்த பிற தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது. [22]

மூன்றாம் பதவி காலம் தொகு

செலாவணி நெருக்கடி தொகு

1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது.

பஞ்சாப் நடவடிக்கை தொகு

 
ஹர்மிந்தர் சாஹிப், சிர்கா 1870

இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது.[23] இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம்.[24] உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் "விரோதத்தை" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார்.

படுகொலை தொகு

தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள்[25] சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார்.

சொந்த வாழ்க்கை தொகு

நேரு-காந்தி குடும்பம் தொகு

 
இந்திராகாந்தியின் தனிப்பட்ட நூலகம்
 
பிரோஜ்காந்தியுடன் இந்திரா - ஓவியம்

தொடக்கத்தில் சஞ்சய் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த ராஜீவ்காந்தியை, விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார்.

இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது தமிழீழ விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி சோனியா காந்தி, 2004 மக்களவை தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய முன்னேற்ற கூட்டணியைத் தலையேற்று நடத்தினார்.

சோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்;இவரின் பேர குழந்தைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அரசியலில் இறங்கினர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி மேனகா காந்தியும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்)[26], சஞ்சயின் மகன் வருண் காந்தியும் முக்கிய எதிர்கட்சியான பிஜேபி கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முரண்பாடுகள் தொகு

மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.[27]

இவற்றையும் பார்க்கவும் தொகு

கூடுதல் வாசிப்பு தொகு

  • வேத் மெஹ்தா, குடும்ப விவகாரம்: மூன்று பிரதம மந்திரிகளின் கீழ் இந்தியா (1982) ஐஎஸ்பிஎன் 0-19-503118-0
  • புப்புல் ஜெயகார், இந்திரா காந்தி: ஓர் உன்னத வாழ்க்கை வரலாறு (1992) ஐஎஸ்பிஎன் 9780679424796
  • கேத்ரீன் பிரான்க், இந்திரா: இந்திரா நேருவின் வாழ்க்கை ஐஎஸ்பிஎன் 0-395-73097-X
  • ராமாச்சந்திரா குஹா, காந்திக்கு பின்னர் இந்திரா: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வரலாறு (2007) ஐஎஸ்பிஎன் 978-0-06-019881-7

மேற்கோள்கள் தொகு

  1. கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 139
  2. கேத்ரீன் பிரான்க், பக்கம் 144
  3. கேத்ரீன் பிரான்க், பக்கம் 136
  4. கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 164
  5. "AROUND THE WORLD; Mrs. Gandhi Not Hindu, Daughter-in-Law Says". New York Times. May 2, 1984. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29.
  6. "பெரோஸ் காந்திக்கு பாராட்டு, சத்ய பிரகாஷ் மாலவியா, தி ஹிந்து, 20-அக்டோபர்-2002". Archived from the original on 2010-08-26. பார்க்கப்பட்ட நாள் 2012-09-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 278
  8. அதை இடத்தில் #2 பக்கங்கள் 154
  9. கேத்ரீன் பிரான்க், பக்கங்கள் 284
  10. [[#கேத்ரின் பிரான்க்பியோ|கேத்ரீன் பிரான்க், பக்கம் 303: பத்திரிக்கைகளாலும், இந்திராகாந்தியின் சக காங்கிரஸ் உறுப்பினர்களாலும் நாற்பது வயதான இந்திரா காந்தியைக் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்படுப்படும் பிற இழிச்சொற்களையும் பட்டியலிடுகிறது. லிண்டன் ஜான்சன் அவரை 'இந்த பெண்' என்று குறிப்பிட்டார்.
  11. அமெரிக்க தூதரகம் (டாக்கா) கேபிள், சிட்ரெப்:டாக்காவில் இராணுவ பயங்கரவாத பிரச்சாரம் தொடர்கிறது; ஆதாரம் இராணுவம் வேறு இடங்களில் சில பிரச்சனைகளை முகங்கொடுக்கிறது, மார்ச் 31, 1971, இரகசியமானது, 3 பிபி
  12. கிழக்கு பாகிஸ்தான்: வானம் கண்ணீர் சிந்தினாலும் கூட பரணிடப்பட்டது 2009-10-08 at the வந்தவழி இயந்திரம், டைம் இதழ் , அக்டோபர் 25, 1971.
  13. 'கேவலமான' இந்திராவை நிக்சன் விரும்பவில்லை, பிபிசி செய்திகள், 29-ஜனவரி-2005
  14. "India's Green Revolution". Indiaonestop.com. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
  15. அதே இடத்தில் #3 பக்கங்கள் 295
  16. பார்மர், பி.எச்., 'பசுமை புரட்சியின்' முன்னோக்குகள் நவீன ஆசிய ஆய்வுகள் xx எண்.1 (பிப்ரவரி, 1986) பக்கம் 177
  17. ரத், நீலகண்டா, "கரீபி ஹட்டாவோ": ஐஆர்டிபி-யினால் இதை செய்ய முடியுமா?" ஈடபிள்யூபி,xx,எண்.6)பிப்ரவரி 1981.
  18. கேத்ரீன் பிரான்க்,, பக்கங்கள் 372
  19. கேத்ரீன் பிரான்க், பக்கம் 373
  20. கோச்சானெக், ஸ்டேன்லி, "திருமதி காந்தியின் அடுக்கு: புதிய காங்கிரஸ், (வெஸ்ட்வியூ பிரசுரம், போல்டர், சிஓ 1976) பக்கங்கள் 98
  21. பிராஸ், பால் ஆர்., சுதந்திரத்தில் இருந்து இந்திய அரசியல் , (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், இங்கிலாந்து 1995) பக்கங்கள் 40
  22. இழக்கப்பட்ட தமிழர்களுக்கான சந்தர்ப்பங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
  23. அதே இடத்தில், பக்கங்கள் 105.
  24. குஹா, ராமசந்திரா காந்திக்கு பிந்தைய இந்தியா பக்கம். 563
  25. இந்தியாடைம்பாஸ் http://www.indiatimepass.com/famous_indians/Indra-gandhi.html பரணிடப்பட்டது 2010-07-04 at the வந்தவழி இயந்திரம்
  26. குஷ்வந்த் சிங்கின் சுயசரிதம் - தி டியூபியூன்
  27. http://www.sscnet.ucla.edu/southasia/History/Independent/Indira.html

வெளி இணைப்புகள் தொகு

இந்திரா காந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


முன்னர்
குல்சாரிலால் நந்தா
இந்தியத் தலைமை அமைச்சர்
1966–1977
பின்னர்
மொரார்ஜி தேசாய்
முன்னர்
மொஹமதலி கரிம் சுக்லா
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
1967–1969
பின்னர்
தினேஷ் சிங்
முன்னர்
மொரார்ஜி தேசாய்
இந்திய நிதியமைச்சர்
1970–1971
பின்னர்
ஒய். பி. சவாண்
முன்னர்
சௌத்ரி சரண் சிங்
இந்தியத் தலைமை அமைச்சர்
1980–1984
பின்னர்
ராஜீவ் காந்தி
முன்னர்
பாமுலபர்தி வேங்கட நரசிம்ம ராவ்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
1984–1984
பின்னர்
ராஜீவ் காந்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_காந்தி&oldid=3628530" இலிருந்து மீள்விக்கப்பட்டது