ஈரில் ஆறு (Iril River) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகள் வழியாகச் செல்லும் ஒரு ஆறு. ஐரில் என்ற பெயர் மற்றும் ரெய் / ரீ ஆகிய இரண்டு சொற்களிலிருந்து உருவானது. மணிப்புரியம் வார்த்தையான ஈ என்பது இரத்தத்தினையும் ரெய்/ரீ என்பது சோப்வோமா மொழியில் ஆற்றினைக் குறிப்பதாகவும்; ”இரத்த ஆறு" என்று பொருள் தருவதாக அமைந்துள்ளது.

ஆற்றுவழி தொகு

இது லகமாய் கிராமத்தில் உருவாகி நகாம்ஜு கிராமம் வழியாகப் பாய்கிறது. (நகாம்ஜூ மக்கள் இதை வைரி என்று அழைக்கின்றனர்) இந்த நதி பின்னர் சாய்குல், சாகோல்மாங் பகுதி வழியாகச் சென்று , இம்பால் நதியுடன் இணைவதற்கு முன்பு லாம்லை, டாப், நஹரூப், பாங்காங் மற்றும் இரில்பங் வழியாகவும் பாய்கிறது. இது ஆறு மிகவும் தெளிவானது. போரோம்பட்டில் அமைந்துள்ள ஒரு ஆலைக்கு நீர் விநியோகம் செய்கிறது. இது மணிப்பூர் ஆறுகளில் தலையான ஒன்றாகும்.[1] ஈரில் நதியில் அதிக எண்ணிக்கையிலான அருகிய அகணிய மீன்கள் உள்ளன. இவை இப்பகுதியில் நாகடன், மெய்டி சாரெங் எனப்படுகிறது. இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிடிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Sutapa Sengupta (2006). Rivers and Riverine Landscape in North East India. Concept Publishing Company. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-276-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரில்_ஆறு&oldid=3876278" இலிருந்து மீள்விக்கப்பட்டது