உவமை (parable) என்பது ஒரு வாக்கியத்தில் வரும் ஒரு விடயத்தை மறைமுகமாக விளக்குதலுக்கு உதவுகிறது. ஒரு சிறப்பிக்கப்படும் பொருளை விளக்குவதற்காகவோ அழகுபடுத்துவதற்காகவோ பயன்படுத்துவர்.

எடுத்துக்காட்டாக மலர் போன்ற முகம் என்பதில் "மலர்" என்பது சிறப்புப் பொருள் - உவமானம். "முகம்" என்பது உவமானத்தால் சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம்.

உவமைகள் பட்டியல் தொகு

  • அச்சாணியற்ற தேர் போல - உயிர் நாடியற்றது.
  • அத்தி பூத்தது போல - மிக அரிதாக
  • ஆண்டிகள் மடம் கட்டியது போல - உருவாகாத திட்டம்
  • ஆற்றில் கரைத்த புளி போல - பயனற்ற செயல்
  • கீரியும் பாம்பும் போல - பகை
  • உயிரும் உடம்பும் போல - ஒற்றுமை
  • கரடி பிறை கண்டது போல - மிக அரிது
  • உள்ளீடற்ற புதர் போல - போலி
  • அடியற்ற மரம் போல - மூலபலமற்றது.
  • கடன்பட்டார் நெஞ்சம் போல - மிகுதியான துன்பம்
  • கண்ணுக்கு இமை போல - பாதுகாப்பு
  • குரங்கின் கை பூமாலை போல - வீணடித்தல்
  • எலியும் பூனையும் போல -பகை உணர்வு
  • சிங்கத்தின் காதில் புகுந்த சிற்றெறும்பு போல - தொடர் மன உளைச்சல்
  • சூரியனைக் கண்ட பனி போல - உடனடியாக விலகுதல்
  • செத்து செத்து எழும் பீனிக்சு போல - உயிர்த்தெழுதல்
  • புற்றீசல் போல - திடீர் பெருக்கம்
  • பிணம் தின்ற பேய் போல -வேதனையிலும் வேதனை
  • வலையில் அகப்பட்ட மான் போல - வசமாகச் சிக்குதல்
  • நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல - அச்ச உணர்வு
  • வேலியே பயிரை மேய்ந்தது போல -இரண்டகம் (துரோகம்)
  • பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல - விரைவாக உடன்படல்
  • நாய் பெற்ற தெங்கம் பழம் - பயனில்லாமை
  • செகுடன் காதில் சங்கு ஊதுவது போல - பயனற்றது
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் - உறுதிஇல்லாத தடுமாற்றம்

வெளி இணைப்புகள் தொகு

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமை&oldid=3684099" இலிருந்து மீள்விக்கப்பட்டது