எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்)

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எட்டுப்பட்டி ராசா (etttupattu rasa) 1997 இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். நெப்போலியன், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி. நடராஜன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் பிப்ரவரி 14, 1997ல் வெளியிடப்பட்டுள்ளது.[1]

எட்டுப்பட்டி ராசா
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புவி. நடராஜன்
கதைகஸ்தூரி ராஜா
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகிச்சஸ்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்பிரமிட் பிலிம்ஸ் இன்ரநஷனல்
வெளியீடு14 பிப்ரவரி 1997
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

சிங்கராசு (நெப்போலியன்) ஓர் புத்திசாலியான கருணை குணம் கொண்ட மனிதன். இவர் எட்டு ஊரை பாதுகாப்பதுடன் கால்வாய் ஒன்றிற்கருகில் வசித்து வந்தார். பழனியம்மா (ஊர்வசி) சிங்கராசை ஒருமுகமாக காதலித்து வர ஆனால் சிங்கராசோ பாண்டியம்மாவையே (குஷ்பு) விரும்பினார். பாண்டியம்மா இரக்க குணத்தோடும் உணச்சிவசப்படுகிற பெண்ணாகவும் இருந்தார். சிங்கராசு இறுதியில் பாண்டியம்மாவை திருமணம் செய்தார்.

மாரிமுத்துவின் (மணிவண்ணன்) சகோதரனும் (சுகன்ராஜ்) பொன்ராசுவின் மகளும் (அபிதா) ஒருவரை ஒருவர் காதலித்தாலும் அவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பை காட்டினர். எனவே சிங்கராசு அவ்விரு ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததோடு அவர்களை சேர்த்து வைப்பதாக வாக்கும் கொடுத்தார். ஆனால் பிறகு அவ்விரு காதல் ஜோடியும் தற்கொலை செய்து கொள்ள பொன்ராசுவும் மாரிமுத்துவும் சிங்கராசுவை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். சிங்கராசு தனது வேலைகளிலே பெரும் பாலும் ஈடுபட்டமையினால் பாண்டியம்மா தனித்து போனாள். ஒர் நாள் மாரிமுத்து சிங்கராசுவை பற்றி பாண்டியம்மாவிடம் ஒரு பொய் கூறினான். இதனால் பாண்டியம்மா தற்கொலை செய்து கொண்டாள். ஆனால் ஊர்மக்களோ சின்ராசுதான் பாண்டியம்மாவை கொன்றான் என கூறத்தொடங்கினர். பழனியம்மா சிங்கராசுவுடன் வந்து தங்கினாள். சிங்கராசுவும் பழனியம்மாவை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தான். பின்னர் ஓர் நாள் பாண்டியம்மாவின் மரணித்ததற்கு காரணம் பொன்ராசு மற்றும் மாரிமுத்து ஆகியோர்னாவர் என்பது தெரியவர பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

  • நெப்போலியன் - சிங்கராசு
  • குஷ்பு - பாண்டியம்மா
  • ஊர்வசி - பழனியம்மா
  • பொன்வண்ணன் - பொன்ராசு
  • மணிவண்ணன் - மாரிமுத்து
  • வினுச்சக்கரவர்தி- பாண்டியம்மா மற்றும் பழனியம்மாவின் தந்தை
  • சார்லி - மொக்கையன்
  • அபிதா - பொன்ராசுவின் மகள்
  • சுகன்ராஜ் - மாரிமுத்துவின் சகோதரன்
  • குமரிமுத்து
  • செம்புலி ஜெகன்
  • கே. ராஜேஷ் குமார்
  • மண்ணாங்கட்டி சுப்ரமணியம்
  • ரூபா ஸ்ரீ - சிறப்பு தோற்றம்
  • விசித்ரா - சிறப்பு தோற்றம்
  • ராம்
  • லட்சுமனன்

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கான வரிகளை கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[2][3][4]"பஞ்சுமிட்டாய்" பாடல் மிகவும் பிரபலமானது.

மேற்கோள்கள் தொகு

  1. "Filmography of ettupatti raasaa". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
  2. "Ettu Patti Rasa By Deva". muzigle.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
  3. "Ettu Patti Raasa - Deva". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.
  4. "Ettupatti Raasa : Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-19.