என். கயல்விழி செல்வராஜ்

இந்திய அரசியல்வாதி

என். கயல்விழி செல்வராஜ் (N. Kayalvizhi Selvaraj) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த தமிழக அமைச்சரும் ஆவார்.

என். கயல்விழி செல்வராஜ்
ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிதாராபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வி. எச். மணியம்மை நகர், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம்

கயல்விழி எம்.காம்., பி.எட்., படித்துள்ளார். இவரது கணவர் கே. செல்வராஜ் ஒரு வழக்கறிஞராவார். இந்த இணையருக்கு எஸ். திலீபன், வழக்கறிஞருக்கு படித்த எஸ். கே. உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர்.[1]

இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று ஆதிதிராவிடர் நலத்துறை (ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்) அமைச்சசராக பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கயல்விழி_செல்வராஜ்&oldid=3147768" இலிருந்து மீள்விக்கப்பட்டது