எலுமிச்சனஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

எலுமிச்சனஅள்ளி (Elumichanahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643224.[1] இந்த ஊரானது எலுமிச்சனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

எலுமிச்சனஅள்ளி
எலுமிச்சனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636805

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், காரிமங்கலத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 283 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1285 குடும்பங்களும் 5350 மக்களும் வசிக்கின்றனர். இதில் 2769 ஆண்களும் 2581 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.1 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Elumichanahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சனஅள்ளி&oldid=3601082" இலிருந்து மீள்விக்கப்பட்டது