எஸ். சீனிவாசன்

எஸ். சீனிவாசன் (S. Srinivasan) இவர் ஓர் இந்திய கட்டிடப் பொறியாளர் ஆவார். இவர் திருக்குறளை கன்னட மொழியில் மொழிபெயர்த்ததில் மிகவும் பிரபலமானார்.[1]

எஸ்.சீனிவாசன் கர்நாடகாவின் கொல்லேகலில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தார். தரகபுரா மற்றும் அலகள்ளி கிராமங்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மைசூரில் உள்ள புனித பிலோமினா கல்லூரி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சிறீ ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் ஆகியவற்றில் பயின்றார். 1965 ஆம் ஆண்டில் கட்டிடப் பொறியாளாராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 2003 இல் ஓய்வு பெற்றார். பின்னர் உதயம் என்ற தமிழ் இதழில் எழுதத் தொடங்கிய இவர் தமிழ் வாசகர்களுக்கு 'உதயம்' சீனிவாசன் என்று அறிமுகமானார். [2] இவரது மொழிபெயர்ப்பு நாடகம் கிரிஷ் கர்னாட் மூலம் 'அயாவதானா' என்ற பெயரில் தில்லி தமிழ் சங்கத்தில் அரங்கேறியது. [1]

2014 ஆம் ஆண்டில், சீனிவாசன் முழுத் திருக்குறள் உரையையும் கன்னட மொழியில் மொழிபெயர்த்தார். இதை சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய கழகம் வெளியிட்டது.[2]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Krishnamachari, Suganthy (20 November 2014). "Under the spell of the Kural". The Hindu (Chennai: Kasturi & Sons). http://www.thehindu.com/features/friday-review/tirukkural-translations/article6618091.ece. 
  2. 2.0 2.1 Srinivasan, S. (2014). Tirukkural in Kannada (in Kannada) (First ed.). Chennai: Central Institute of Classical Tamil. pp. xxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81744-05-5.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சீனிவாசன்&oldid=3604607" இலிருந்து மீள்விக்கப்பட்டது