ஓனோபைட்டா சமர்

பண்டைய கிரேக்க போர்

ஓனோபைட்டா சமர் (Battle of Oenophyta) என்பது முதலாம் பெலோபொன்னேசியப் போரின்போது கிமு 457 இல் ஏதென்ஸ் மற்றும் போயோட்டியன் நகர அரசுகளுக்கு இடையே நடந்த ஒரு போர் ஆகும்.

ஓனோபைட்டா சமர்
முதல் பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 457 BC
இடம் ஓனோபைட்டா
ஏதென்ஸ் வெற்றி
பிரிவினர்
ஏதென்ஸ் போயோட்டியாவின் நகர அரசுகள்
தளபதிகள், தலைவர்கள்
மைரனைட்ஸ் தெரியவில்லை
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

பாரசீகப் போர்களுக்கும் பெலோபொன்னேசியப் போருக்கும் இடையிலான இந்த காலகட்டத்தில், மிகக் குறைவாக நீடித்த போர்கள் இருந்தபோதிலும், நகர அரசுகளின் கூட்டணிகள் உருவாகி பின்னர் சரிந்தன. கிமு 457 இல், டெலியன் கூட்டணியின் தலைவரான ஏதென்சு, கொரிந்து மற்றும் அவர்களது கூட்டாளியான எசுபார்த்தாவுடன் ( பெலோபொன்னேசியன் கூட்டணியின் தலைவர்) மெகாராவுடன் மோதலில் ஈடுபட்டன. ஓனோபிட்டா போருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, எசுபார்த்தாவால் தனக்ரா போரில் ஏதெனியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். என்றாலும் எசுபார்த்தா பல வீரர்களை இழந்தது, அவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட முடியவில்லை.

தனக்ராவில் 14,000 பேரைக் கொண்டிருந்த ஏதெனியர்கள், அந்தப் போருக்குப் பிறகு மீண்டும் படையை ஒருங்கிணைத்து, போயோட்டியாவிற்கு அணிவகுத்துச் சென்றனர். ஓனோபைட்டாவில், மைரனைட்ஸ் தலைமையில், அவர்கள் போயோட்டியர்களை தோற்கடித்தனர். பின்னர் தனக்ராவின் மதில் சுவர்களை அழித்து, லோக்ரிடா மற்றும் போசிசை அழித்தனர். ஓனோபைட்டாவில் அவர்கள் பெற்ற வெற்றி, ஏதென்சு ஏஜினாவை அந்த ஆண்டின் பிற்பகுதியில் தோற்கடிக்க ஏதுவானது. மேலும் ஏதெனியன் துறைமுகமான பைரேயஸ் (எசுபார்த்தாவால் எதிர்க்கப்பட்ட பணி) வரையிலான நீண்ட சுவர்களைக் கட்டும் பணியை முடிக்க இயன்றது.

கிமு 447 இல் கொரோனியா போரில் ஏதென்சு தலைமையிலான அணி தோற்கடிக்கப்படும் வரை ஏதென்சின் கட்டுப்பாட்டில் போயோடியா இருந்தது .

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓனோபைட்டா_சமர்&oldid=3439793" இலிருந்து மீள்விக்கப்பட்டது