கயத்தாறு முத்துக்கிருஷ்ணேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கயத்தாறு முத்துக்கிருஷ்ணேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்துக்கிருஷ்ணேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:சிவன்கோயில் தெரு, கயத்தாறு, கோவில்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோவில்பட்டி
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:முத்து கிருஷ்ணேஸ்வரர்
தாயார்:திருமலைநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி திருவிழா, திருவாதிரை திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் முத்து கிருஷ்ணேஸ்வரர், திருமலைநாயகி சன்னதிகளும், தட்சனாமூர்த்தி, சுப்பிரமணியர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி, மார்கழி மாதம் கந்தசஷ்டி திருவிழா, திருவாதிரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)