காமயக்கவுண்டன்பட்டி

காமயகவுண்டன் பட்டி (ஆங்கிலம்:Kamayagoundanpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 16,134 மக்கள்தொகையும், 13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1][2]

காமயகவுண்டன்பட்டி பேருராட்சி முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையானது இப்பேருராட்சியின் கிழக்குப்பக்கம் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் திராட்சை பயிரிடுதல் முக்கிய தொழிலாகும். மேலும் திராட்சை பழரசம் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது.

ஆதாரங்கள்

தொகு
  1. காமயகவுண்டன் பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  2. "Kamayagoundanpatti Town Panchayat City Population Census 2011-2024". www.census2011.co.in. Retrieved 2024-08-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமயக்கவுண்டன்பட்டி&oldid=4064186" இலிருந்து மீள்விக்கப்பட்டது